ஸதாசார தினசர்யா - மாணவர் நாள்நடத்தை
ஓம் ஸதாசார தினசர்யா (மாணவர் நாள்நடத்தை) ஆக்கம் ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ அதிகாலையில் எழுவேன்; காலைக்கடன் முடிப்பேன்; ஆஸனங்கள் செய்வேன்; குளிர்ந்தநீரில் குளிப்பேன்; தூய ஆடைகள் உடுப்பேன்; சமயச்சின்னம் தரிப்பேன்; பெற்றோரை வணங்குவேன்; குருவைப் போற்றுவேன்; இறைவனைத் தொழுவேன்; பாடநூல் படிப்பேன்; அம்மாவுக்கு உதவுவேன்; சிற்றுண்டி உண்பேன்; பள்ளிக்கூடம் செல்வேன்; கவனமாகக் கேட்பேன்; கருத்தூன்றிப் படிப்பேன்; ஓடியாடி விளையாடுவேன்; விளக்குகள் ஏற்றுவேன்; ஸ்தோத்திரங்கள் படிப்பேன்; வீட்டுப்பாடம் முடிப்பேன் ; கூடிச்சோறு உண்பேன்; இரவுவானம் ரசிப்பேன்; இறைவனை நினைப்பேன்; இனியகதைகள் கேட்பேன்; படுக்கை விரிப்பேன்; பத்துமணிக்குள் படுப்பேன்.