திருக்குறள் ஆத்திசூடி
ஓம் திருக்குறள் ஆத்திசூடி ஆக்கம் ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ அறத்துப்பால் 1.கடவுள் வணங்கு. 2. வான் சிறப்புணர். 3.நீத்தார் போற்று. 4. அறன்வலி அறி. 5. இல்வாழ். 6. வாழ்க்கைத் துணைநலம் பேண். 7. நன்மக்கள் பெறு. 8. அன்பு வளர். 9. விருந்தோம்பு. 10. இனியவை கூறு. 11. செய்ந்நன்றி அறி. 12. நடுவுநில். 13. அடக்கம் ஆற்று. 14. ஒழுக்கம் கா. 15. பிறன் இல் விழையாதே. 16. பொறைவளர். 17. அழுக்காறு அழி. 18. வெஃகாதே. 19. புறம்கூறல் தவிர். 20. பயன் இல சொல்லாதே. 21. தீவினை அஞ்சு. 22. ஒப்புரவு அறி. 23. ஈ. 24. புகழ்சேர். 25. அருள்கொள். 26. புலால்மறு. 27. தவம் செய். 28. கூடாஒழுக்கம் விலக்கு. 29. கள் விரும்பாதே. 30. வாய்மை பேண். 31. வெகுளாதே. 32. இன்னா செய்யாதே. 33. கொல்லாதே. 34. நிலையாமை உணர். 35. துறவு கைக்கொள். 36. மெய்உணர். 37. அவா அறு 38.ஊழ் வலியது உணர். பொருட்பால் 39. இறைமாட்சி அறி. 40. கற்றுணர். 41. கல்லாமை இழிவு. 42. கேட்டறி. 43. அறிவு பெருக்கு. 44. குற்றம் நீக்கு. 45. பெரியாரைத் துணைக்க...