Posts

Showing posts with the label கவிதை

இரண்டற்ற ஒன்று

Image
இரண்டற்ற ஒன்று ! இவை அனைத்தும் முன்னர் சத்தாகவே இருந்தது, இரண்டற்ற ஒன்றாய்! உருவிலி அதுவே வானாகி வானே வளியாகி வளியே ஒளியாகி ஒளியே நீராகி நீரே நிலமாகி நிலமே பயிராகி பயிரே உடல்களாகி விளங்கும். உடல் மண்ணாகும் மண் நீராகும் நீர் ஒளியாகும் ஒளி வளியாகும் வளி வானாகும் வானும் மறைந்து அவ்யக்தமாகும் அவ்யக்தம் சத்தாகும். சத்தே எஞ்சிநிற்கும் சதாசிவமாய்.  சத் அசத்தாகாது அசத் சத்தாகாது. சத்தே சித்தாகும் ஸத்தும் சித்தும் அனந்த மாகும் ஆனந்த மாகும் ஆத்மாவாகும். பின்னர் மீண்டுமதுவே அனைத்துமாகும். அதுவே அனைத்துமென்றால் அனைத்துமென்பதில்லை அதுவே இருக்கின்றது இரண்டற்ற ஒன்றாய்!      

வானம் பாரு!

Image
  வானம் பாரு! வானம் பாரு! வரையறை இல்லா வாழ்க்கை கேளு!   சூரியன் பாரு! சுடர்விடும் ஞானம் கேளு!   சந்திரன் பாரு! குளிர்தரும் பார்வை கேளு!   காற்றினைப் பாரு! எதையும் கடந்திடும் வலிமையைக் கேளு!   நிலந்தனைப் பாரு! நில்லா ஓட்டத்திலும் நிதானம் கேளு!   மரங்களைப் பாரு! நின்றே வாழும் ரகசியம் கேளு!   பூவினைப் பாரு! புலர்ந்திடும் பொழுதில் விழித்தலைக் கேளு!   தேனியைப் பாரு! தெரிந்து தெளியும் தெளிவைக் கேளு!   பறவையைப் பாரு! பாங்காய் வாழ்ந்திடும் லாகவம் கேளு!   நதியினைப் பாரு! மூலத்தைத் தேடும் முனைப்பினைக் கேளு!   காலத்தைப் பாரு! கணக்காய் நடந்திடும் கடுமையைக் கேளு!   கடவுளைப் பாரு! சமநிலை நின்றிடும் சித்தம் கேளு!!  

அவரவர் உலகில் அவரவர் !

Image
  அவரவர் உலகில் அவரவர் ! அழகு உண்மையில் இருக்கலாம்; அல்லது இருப்பதாக பார்க்கவும் படலாம்.   தவறு உண்மையில் இருக்கலாம்; அல்லது இருப்பதாக பார்க்கவும் படலாம்.   உலகம் இருவிதம் - உள்ளது ஒன்று பார்ப்பது ஒன்று. உள்ளதை உள்ளவாறு பார்ப்பதும், பார்ப்பதை நேராக்கி கொள்வதும் பார்ப்பவன் கையில் உள்ளது.   உலகம் நல்லதா? கெட்டதா? வாழ்க்கை இன்பமா? துன்பமா? யார் சொல்ல முடியும்?   அவரவர் உலகில் அவரவர் வாழ்கின்றார்!

எப்பொழுதும் தயாராக இரு!

Image
எப்பொழுதும் தயாராக இரு! பிரச்சனை இல்லாமல் குழப்பமில்லை. குழப்பமில்லாமல் தேடலில்லை. தேடல் இல்லாமல் தெளிவு இல்லை. தெளிவு இல்லாமல் ஞானம் இல்லை. ஞானம் இல்லாமல் அமைதி இல்லை. அமைதி இல்லாமல் இன்பம் இல்லை. பிரச்சனை பிரச்சனை இல்லை. பிரச்சனை இன்பத்திற்கான விதை. பிரச்சனையைக் கண்டு அஞ்சாதே - எதிர்கொள்ள எப்பொழுதும் தயாராக இரு!

மாறாத அன்பு

Image
மாறா த அன்பு   மனம் ஒன்றுதான், எண்ணங்கள் பல! அன்பு ஒன்றுதான், அன்பிற்குரிய விஷயங்கள் பல! விஷயங்கள் மாறுகின்ற பொழுது அன்பும் மாறுகின்றது. ஆனால், அன்புக்காக மட்டும் அன்பிருந்தால் விஷயங்கள் மாறினாலும் அன்பு மாறாது!

விநாயக புராணம்

Image
  விநாயக புராணம் பெரும் காதுகள் - அதிகம் கேள்! மறைந்திருக்கும் வாய் - குறைவாக அடக்கமாகப் பேசு! நீண்டிருக்கும் கை - அதிகம் கொடு! உடைந்த தந்தம் - உன்னுள் சிறந்ததை உலக நன்மைக்குப் பயன்படுத்து! மோதக ஹஸ்தம் - மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொடு! அங்குச ஹஸ்தம் - உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்! நான்கு கைகள் - தேவ இனம்; இரண்டு கால்கள் - மனித இனம்; பெருவயிறு - அரக்க இனம்; யானைத்தலை - விலங்கினம்; அனைத்து உயிர்களும் அவனுள் அடக்கம்! சிறிய வாகனம் (எலி) - அனைத்து உடல்களுள்ளும் அவன் அடக்கம் (ஆத்மாவாய்) !

பெரிதினும் பெரிது கேள் !

Image
  பெரிதினும் பெரிது கேள் ! பெரியது ! ப்ரம்மம் பெரியது பிரபஞ்சம் பெரியது வான் பெரியது காற்று பெரியது சூரியன் பெரியவன் சந்திரன் பெரியவன் நீர் உலகம் பெரியது நிலவுலகம் பெரியது உயிர்கள் பெரியன மனித உடல் பெரியது மனித மனம் பெரியது !   வாழ்வு சிறியது இளமை சிறியது செல்வம் சிறியது பணம் சிறியது பதவி சிறியது அகங்காரம் சிறியது விருப்பு வெறுப்புகள் சிறியன !   சிறுமைகள் விடுத்து பெரியது பற்றி பெருமைகள் அடை!   மதவெறி விடு மொழிவெறி விடு இனவெறி விடு பணவெறி வீடு விடுதலை விரும்பினால் விடு அனைத்தையும் விட்டு விடு!   பெரிது கேள் பாரதி கேட்டதுபோல்... பெரிதினும் பெரிது கேள் ! வள்ளுவன் சொன்னதுபோல்... சார்புணர்ந்து சார்பு கெடஒழுகு!

ஒன்று!

Image
    ஒன்று!   கண்கள் வேறு காதுகள் வேறு நாசி வேறு நாக்கு வேறு கைகள் வேறு கால்கள் வேறு ஒன்று போல் இன்னொன்று இல்லை; ஒன்று செய்வதை மற்றொன்று செய்யாது. இப்படி உறுப்புகள் வேறாயினும் உள்ளே நானென்று உறைபவன் ஒருவன்தான்! காட்சிகள் வேறாயினும் காண்பவன் ஒருவன்தான்! அனுபவங்கள் வேறாயினும் அனுபவிப்பவன் ஒருவன்தான்! உடைகள் வேறாயினும் உடல் ஒன்றுதான் என்பது போல! இதைப்போலவே உலகமும் இறைவனும். கண்கள் பல காதுகள் பல கைகள் பல கால்கள் பல உடல்கள் பல உலகம் பல ஆனாலும் உள்ளே உறைபவன் ஒருவன் தான். அனைத்திற்கும் ஆதாரமான ஆத்மா ஒன்று தான். அனைத்தையும் அறிகின்ற ஞானம் ஒன்றுதான். உன்னுள்ளே மாறாத உன்னைப் பார் ! உலகுள்ளும் அதையே பார்!!

பாவம் மனிதர்கள்!

Image
  🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ பாவம்! கலியுகத்தில் மனிதர்கள்! அறிவுக்கான அங்கம் இருந்தும் அதைக் குப்பைகளால் நிரப்பி புழுக்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இன்பம் எங்கே எங்கே என்று எங்கேயும் தேடி துன்பத்தில் வீழ்ந்து துவண்டு போகிறார்கள்! உயிர்களை நேசிப்பது விட்டு பொருட்களை நேசித்து சடங்களாய் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்! காண கண்ணுக்கினிய காட்சி நேரே இருக்க அதைக் காட்சி ஊடகத்தின் வழியே கண்டு குதூகலிக்கிறார்கள்! எதார்த்தத்தில் வாழ முடியாத வாழ்க்கையை சினிமாக் கதைகளில் கண்டு கனவுகளில் களித்துக் கொண்டிருக்கிறார்கள்! பறவைகளும் விலங்குகளும் எளிமையாய் வாழும் வாழ்க்கையை, பரபரப்புடன் இயந்திரங்களுக்குள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! இறைவனையே தலைவனாய்க் கொண்டு வாழ்ந்த காலம் போய், இயக்கத் தலைவனையே இறைவனாய்க் காணும் பகுத்தறிவு மோஹத்தில், பாவம்! அவர்கள் என்ன செய்ய முடியும்! தன்னுள் இறைவனைக் கண்ட யோகிகள் காலம் போய், தன்னையே இறைவனாய் சொல்லும் போகிகள் குருமார்களாய் மலிந்த காலத்தில், பாவம்! அவர்கள் என்ன செய்ய முடியும்! சிலருக்கு... உண்பதும் குடிப்பதும் ஊர் சுற்றுவதுமே வாழ்க்கை என்றானபின் நிற்கவும் யோசிக்கவும...

துரீயம்!

Image
துரீயம்! நானிருந்தேன்  ஆழ்ந்த உறக்கத்தில் காலம் இல்லை  வெளி இல்லை  இதுவும் அதுவும்  எதுவும் இல்லை அங்கு  நான் மட்டும் இருந்தேன். சுவாசம் இருந்தது  அது நானாய் இல்லை, அவித்தை இருந்தது  அதுவும் நானாய் இல்லை. நான் மட்டும் இருந்தேன் ஆநந்தம் இருந்தது.  ஆநந்தம் இருந்தது  ஆநந்தமாய் நானிருந்தேன். வந்துவிட்டன  விழித்த பிறகு அனைத்தும், ஆனாலும் நான் மட்டும் இருக்கிறேன் - ஆழ்ந்த உறக்கத்தில் போல விழிப்பிலும் கனவிலும். 🔯🔯🔯🔯🔯🔯

ராமனும் ராவணனும் உன்னுள்ளே!

Image
ராமனும் ராவணனும் உன்னுள்ளே! பாகம் : 1 ராமனை உன்னுள்ளே தேடு! தாய் தந்தை சொல் தட்டாத பணிவு! தம்பிக்கு நாட்டை தந்த தியாகம்! பண்பிருந்தால் வேறு குலத்தோனாயினும் தம்பியாய் ஏற்கும் தகைமை! பறவையையும் உறவாய்  பார்க்கும் மாண்பு! நலிந்தோராயின் விலங்கினத்திற்கும் தோள்கொடுக்கும் நல்குரவு! அசுரனாயினும் அறவழி நின்றால்  ஆதரிக்கும் சால்பு! அரசனாயினும் வாழ்க்கைத்துணை  ஒன்றே என்னும் அறம்! எதிர்ப்பவர் எவராயினும் எதிர்கொள்ளும் வீரம்! தெய்வகுணங்களில் ரமிப்பவனே ராமன்,  ராமனை உன்னுள் தேடு! பாகம் : 2 ராவணனைக் கொன்று போடு! வலிமையையே  பலவீனமாக்கும்,  வரத்தையே சாபமாக்கும்  - அகங்காரம்.  உறவையே பகையாக்கும், மறத்தையே அறமாக்கும் - காமம். வீரத்தையும் வலிமையையும்  விழலுக்கிறைத்த நீராக்கும் - தூக்கமும் சோம்பலும்.   மூளையை மழுங்கடிக்கும் வெட்கத்தை விரட்டியடிக்கும் - ஆசையும் மோகமும். அடிமையாக்கும் அசுரகுணங்களை அடியோடு வெட்டி எறி. உன்னுள் உறையும்  ராவணனையும் கும்பகர்ணனையும்  சூர்ப்பனகையையும் கொன்று போடு!