ஒருமையும் இருமையும்
ஒருமையும் இருமையும் உருவமில்லாத கடவுளுக்கு உருவம் எதற்கு? எங்கும் இருக்கின்ற இறைவனுக்குச் சிலைகள் எதற்கு? என்றெல்லாம் கேட்கிறார்கள் நவீன சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள். உண்மைதான். கடவுள் உருவம் இல்லாதவர், எங்கும் உள்ளவர். உருவமில்லாத எங்கும் உள்ளதை நாம் எப்படி காண்பது? எப்படித் தொடர்பு கொள்வது? எங்கும் உள்ளது என்றால் என்ன பொருள்? எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருப்பது எதுவோ அதுவே எங்கும் உள்ளது, என்றும் உள்ளது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் இறைவனே இருக்கின்றார் என்றால் உலகம் எங்கே இருக்கின்றது? ஒரு இடத்தில் ஒரு காலத்தில் ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்பதே அனுபவம். எங்கும் கடவுள் இருக்கின்றார் என்றால் உலகம் இல்லை. உலகம் இருக்கின்றது என்றால் கடவுள் இல்லை. உலகம் இருக்கின்றதா? கடவுள் இருக்கின்றதா? இல்லை இரண்டும் தனித்தனியாக இருக்கின்றது என்றால், உலகம் இருக்கின்ற இடத்தில் கடவுள் இல்லை, கடவுள் இருக்கின்ற இடத்தில் உலகம் இல்லை என்றாகும். இரண்டும் ஒன்றை ஒன்று வரையறுக்கின்றது. எனில், கடவுள் பூர்ணமானவர் அல்ல. பூர்ணத்துவம் இல்லாதவர் கடவுளல்ல. எனில் கடவுள் இல்லை என்றாகின்றத...