Posts

Showing posts with the label அறிவோம் ஆன்மிகம்

சிற்றின்பமும் பேரின்பமும்

சிற்றின்பமும் பேரின்பமும் ஒரு மனிதன் வாழ்க்கையில் அடைய முடிந்த உச்சபட்ச நிலை என்ன ? ஜீவன்முக்தி என்பதுதான் அது. நாம் உலக விஷயங்களை அனுபவிக்கிறபோது நமக்கு கிடைக்கக் கூடிய இன்பம் சிற்றின்பம். இந்த இன்பம் சிறிய காலம் இருந்து மறைந்து போகக்கூடியது. இது உலகப் பொருள்களை சார்ந்து வருவது. கண்கள் வழியாகக் காட்சிகளை பார்க்கிறோம். காதுகள் வழியாக இனிமையான ஒலிகளைக் கேட்கிறோம். அதனால் நமக்கு இன்பம் கிடைக்கிறது. மூக்கின் வழியாக நல்லவாசனைகளையும் நாக்கின் மூலம் பலவிதமான சுவைகளையும் அனுபவிக்கிறோம். தோல் வழியாக ஸ்பர்சசுகம் கிடைக்கிறது. ஆனா இந்த இன்பங்கள் எல்லாம் கண் காது மூக்கு நாக்கு தோல் என்கிற இந்த கருவிகள் சரியாக இருக்கின்ற பொழுது தான் கிடைக்கும். அதே மாதிரி அனுபவிக்கக்கூடிய விஷயங்களும் சரியாக இருக்கின்ற பொழுது தான் இன்பம் இருக்கும். இந்த பொறிகளும் புலன்களும் மாறுபடக்கூடியவையாக இருப்பதனால் இதிலிருந்து வரக்கூடிய இன்பத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. அது மட்டும் இல்லை இந்தப்புலன்களும் பொறிகளும் சேருகின்ற பொழுது மனதும் அதோடு சேர்ந்தால்தான் இன்பமானது ஏற்படுகின்றது. மனது சரியான நிலையில் இல்லை எ...

கடவுள் இருக்கிறாரா ?

Image
கடவுள் இருக்கிறாரா? கடவுள் பற்றி இந்துமத வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள வேதாந்தம் எனப்படுகிற உபநிஷத்துகள் என்ன சொல்லுகின்றன என்பதைப்பற்றி சொல்லுகின்றேன். ஒருபொருள் தோன்றுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் தேவை. ஒன்று மூலகாரணம், மற்றொன்று அறிவுக் காரணம். உதாரணமாக பானை இருக்கிறது என்றால் பானை தோன்றுவதற்கு மண் மூலகாரணம் அதாவது மூலப்பொருள். குயவன் அறிவுக்காரணம் அல்லது உயிர்க்காரணம். ஆகவே பானை இருக்கிறது; பானைக்கு மூலப்பொருளாக மண் இருக்கிறது; (மண்ணே பானையாக ஆகி இருக்கின்றது.) மண்ணைப் பானையாக ஆக்கிய குயவன் இருக்கின்றான். அதுபோல உலகம் இருக்கிறது என்றால் உலகம் தோன்றுவதற்கான மூலப்பொருளும் அறிவு பொருளும் இருக்க வேண்டும் அல்லவா! அதுவே கடவுள். மண்ணை பானையாக ஆக்கிய குயவன் போல் உலகை ஆக்கியவர் கடவுள். குயவன் பானையை செய்வதற்கான மூலப் பொருளான மண்ணை பூமியிலிருந்து எடுத்தது போல கடவுள் உலகை படைப்பதற்கான மூலப்பொருளை எங்கிருந்து எடுத்தார் என்ற கேள்வி வரலாம். கடவுள் உலகைப் படைக்க வேறு எங்கிருந்தோ மூலப்பொருளை எடுத்தார் என்று சொன்னால் அந்த மூலப்பொருளை  எதிலிருந்து எப்பொழுது யார் படைத்த...