அறம் செய விரும்பு - 19

மாலைப்பொழுதைக் கழித்தல்

மாலையில் சூரியன் மறையத் தொடங்கியதும் சந்தியாவந்தனம், தொடர்ந்து ஸமிதாதானம் அல்லது ஒளபாஸனம், தேவபூஜை வைச்வதேவம் அதிதிபூஜை செய்ய வேண்டும்.

இரவில்

இதமும் மிதமான நல்ல உணவைச் சாப்பிட்டுப்பின் சிறிது நேரம் கழித்துத் தூங்கலாம். கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்துப் படுக்கலாம். வடக்கில் தலை வைக்கக்கூடாது. யாத்திரையில் மேற்கில் தலைவைத்துப் படுக்கலாம். தன் வீட்டில் கிழக்கிலும் மாமனார் வீட்டில் தெற்கில் தலை வைத்துப் படுக்கலாம். முன்னிரவில் 71/2 நாழிகை (3 மணி) சென்ற பின்னரே தூங்கச் செல்ல வேண்டும். சிறுவர்களும் வயதானவர்களும் நோயாளிகளும் முன்னரே தூங்கலாம். தூங்குமுன் அகத்தியர், மாதவன், முசுகுந்தர், கபில முனிவர், ஆஸ்தீக முனிவர் இவர்களை நினைத்துப் படுக்க வேண்டும். ஆஸ்தீகரின் நினைவு பாம்பு பயத்தை போக்கும். நர்மதையை நினைப்பதும் நல்லது. கோயிலிலும், சுடுகாட்டின் அருகிலும், மரத்தினடியில், நாற்சந்தியிலும், தானிய மூட்டையின் மேலும், குரு, இஷ்டதெய்வம் பெரியோர் இவர்களின் எதிரிலும், அசுத்தமாகவும், கால்களை அலம்பாமலும் பாதுகாப்பில்லாமலும், கருங்கல்லின் மேலும் தூங்கக் கூடாது. 

சுகமான விரிப்பின் மேல் இடதுபுறத்தைக் கீழே வைத்துப் படுப்பது ஆரோக்கியம் தரும். மல்லார்ந்துபடுப்பது பலம் தரும். நோயாளிக்கு அருகே படுக்கக் கூடாது. ஈரமான ஆடையுடனும் ஆடை இல்லாமலும் அழுக்கான ஆடை போர்த்தும் படுக்கக்கூடாது. சிறுவர்களுக்கு இடையே பெண்களுக்கிடையே தூங்கக் கூடாது. பகலில் தூங்கக்கூடாது. சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், உடல் உழைப்பால் களைத்தவர்கள் பகலில் தூங்கலாம். இரவில் கண் விழித்தவர்கள் விழித்தநேரத்தின் பாதியளவு பகலில் தூங்கலாம்.

கிருஹஸ்தனாயின் சந்ததியை விரும்பி ருது காலம் முடிந்ததும் பருவகாலம் முதலியவை நீக்கி நல்ல நாட்களில் இரவின் 2-3வது யாமத்தில் மனைவியிடம் உடல் உறவு கொள்ளலாம். மாதவிடாய் முடிந்ததும் 10 நாட்கள் இதற்கேற்றவை. காம சுகம் விரும்பி அதன் பின்னரும் சேரலாம். ஸந்ததியை விரும்பினால் உபவீதியாகவும், காம இச்சையானால் நிவீதியாயும் சேரவேண்டும். ஆண் ஆடை குறைத்தவனாகவும் பெண் ஆடை நீக்காதவளாகவும் இருக்க வேண்டும். இருவரும் மனமொத்து விரும்பிச்சேர்தல் நல்லது.

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

Gita Chapter 15 - புருஷோத்தம யோகம்