அவரவர் உலகில் அவரவர் !

 

அவரவர் உலகில் அவரவர் !


அழகு
உண்மையில் இருக்கலாம்;
அல்லது இருப்பதாக
பார்க்கவும் படலாம்.
 
தவறு
உண்மையில் இருக்கலாம்;
அல்லது இருப்பதாக
பார்க்கவும் படலாம்.
 
உலகம் இருவிதம் -
உள்ளது ஒன்று
பார்ப்பது ஒன்று.
உள்ளதை
உள்ளவாறு பார்ப்பதும்,
பார்ப்பதை
நேராக்கி கொள்வதும்
பார்ப்பவன்
கையில் உள்ளது.
 
உலகம்
நல்லதா? கெட்டதா?
வாழ்க்கை
இன்பமா? துன்பமா?
யார் சொல்ல முடியும்?
 
அவரவர் உலகில்
அவரவர் வாழ்கின்றார்!

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101