Posts

Showing posts from March, 2020

அறம் செய விரும்பு -17

போஜனநியமங்கள்   வாய்கொள்ளுமளவிற்குக் கையில் உணவு எடுக்க வேண்டும். அதிகமாக எடுத்து வாயில் போட்டு மீந்ததையும் கடித்து மீந்ததையும் கலத்திலுள்ளதுடன் கலக்கக்கூடாது. சத்தமிட்டு உறிஞ்சி அல்லது கடித்துச் சாப்பிடக்கூடாது. பருகும் நீரும் குடிக்கக்கூடிய அளவில் எடுத்து உதட்டில் படாமல் எச்சிற்படாமல் தூக்கிப்பருக வேண்டும். பருகி மீந்த ஜலம், எச்சில்பட்ட ஜலம் நல்லதல்ல. சம்பந்தப்படாத பலர் நோக்க உண்ணக்கூடாது. பந்தியாகப் பலர் உட்கார்ந்து சாப்பிடும்போது நடுவில் ஒருவர் எழக்கூடாது. எழுந்தால் மற்றவரும் அத்துடன் எழ வேண்டும். அப்படி எழநேர்ந்தால் சாம்பல் ஜலம் இவற்றைக்கொண்டு பிரிவினை செய்ய வேண்டும். தூண்களின் இடையே, வாசலுக்கு அருகே, வழியில், தாழ்ந்தோ, மேடிட்டோ மற்றவர் உட்கார்ந்த இடத்திற்குச் சமமாக இல்லாத இடத்திலோ அமர்ந்தவர் நடுவில் எழுந்தால் பந்தி தோஷமில்லை. உண்ணும்போது ஒருவரை ஒருவர் தொடக்கூடாது. இடதுகையால் நீர் பருகும்போது வலதுகையால் உண்கலனைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். உப்பு, வியஞ்சனம் (ஊறுகாய், காய்கறி) நெய், எண்ணெய், பாயஸம், அன்னம் இவற்றைக் கரண்டியாலன்றிக் கையால் பரிமாறக்கூடாது. எண்ணெய் பொ...

அறம் செய விரும்பு - 16

போஜனம் - உணவு உண்ட உணவு உடற்பகுதி அனைத்திற்கும் ஊட்டமும் வலிவும் தெளிவும் தருவதாக அமையவேண்டும். உணவாலேயே உள்ளமும் எண்ணமும் உணர்வுகளும் அறிவும் அமைகின்றன. அதனால் அவைகளுக்கு உறுதியும் தெளிவும் தருவதாக உணவு அமைய வேண்டும். செயலும் எண்ணமும் காரணமாக அமைய ஆத்மாவிற்கு வினையால் கட்டும்(பந்தமும்) வினைநீக்கமும் ஏற்படும். அதனால் போஜனத்தைப் பசி நீங்கவும் நாக்குக்குத் திருப்தி அளிக்கவும் உள்ளதாகக் கருதாமல் ஆத்மதிருப்தி தருவதாக அமைப்பதில் நாட்டம் தேவை. போஜனத்திற்குமுன் வைச்வதேவமும் அதிதி பூஜையும் நடத்துவதன் மூலம், தன்னலத்தை மட்டுமே கருதாமல் சமைத்த உணவில் தன்னுடன் உடல் சம்பந்தப்படாத பலருக்கும் அதில் பங்கு உண்டு என்பதை உணரலாம். மந்திரம் சொல்லிப் போஜனத்தைத் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். கை கால்களை அலம்பி உபவீதியாக உத்தரீயம் தரித்து இரண்டு தடவை ஆசமனம் செய்து. கிழக்கு அல்லது மேற்கு முகமாக (சிராத்தத்தன்று வடக்கு முகமாக) ஆஸனத்தில் அமர்ந்து கால்களை ஆசனத்திற்கு வெளியே தரையில் வைத்து சந்தனம் தரித்து, தங்கம் வெள்ளி வெண்கலம் தாமிரம் இவற்றாலான பாத்திரத்திலோ வாழை இலையிலோ சாப்பிடவேண்டும். உண்கலம் போடுமி...

அறம் செய விரும்பு - 15

பஞ்சமஹாயஜ்ஞங்கள் - ஐம்பெரும் வேள்விகள் வைச்வதேவம் இதுவும் வேதம் மற்றும் ஸூத்ரங்களுக்கேற்ப மாறுபடும். பகலை எட்டாக வைத்து 5வது பாகத்தில் (15 - 18 3/4 நாழிகை 12 - 1 1/2 மணி) இது செய்யப்படவேண்டும். இது மாத்யாந்ஹிகம், பிரும்மயஜ்ஞம் தேவபூஜைக்கு பின் நடைபெற வேண்டியது. சமையல் அடுப்பிலிருந்து எடுத்த அக்கினியும், தேவபூஜையில் நிவேதனம் செய்யுமுன் வைச்வதேவத்திற்கெனத் தனியே எடுத்துவைத்து நெய்யால் சுத்திசெய்யப்பட்ட அன்னமும் இதற்குத்தேவை. வைச்வதேவத்திற்கெனத் தனித்து அன்னமும் வியஞ்சனமும் தயாரிக்கலாம். சிஷ்டர்களான பெரியோர்கள் காட்டிய வழியில் இதனை செய்யலாம்.  இது மூன்று பிரிவில் அடங்கும். சகல ஹோமம், வைச்வதேவம், பலி இடுதல் என. செய்த பாபமனைத்தும் நீங்க சகல ஹோமம். அது முடிந்ததும் உணவைத் தயாரிப்பதில் பல உயிரினங்கள் அழிவதால் ஏற்பட்ட பாபம் விலக வைச்வதேவ ஹோமம் செய்கின்றனர். (1) அடுப்பு (2) அம்மி (3) உரல் உலக்கை (4) நீர்த்தவலை (5) முறம் சல்லடை முதலியவை என்ற ஐந்தும் உயிருள்ள தான்யம் காய்கறி முதலியவற்றை உணவுக்காக உருவழிக்கின்றன. இந்தப்பாபம் சாப்பிடுபவனை ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் சேர்கின்றது. ஐந்த...

அறம் செய விரும்பு - 14

Image
தேவபூஜை விநாயகராக சோணபத்திரத்தையும், சிவனாக பானத்தையும், கெளரியம்பாளாக ஸ்வர்ணமுகி (மாக்ஷிக) சிலையையும், விஷ்ணுவாக ஸாலக்ராமத்தையும், ஸூர்யனாக ஸ்படிகத்தையும் வைத்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. ஸ்கந்தன், லஷ்மி, லலிதா, பரமேச்வரி முதலானவரை இஷ்டதேவதையாக விக்கிரகமாகவோ யந்திரமாகவோ படமாகவோ இவற்றுடன் சேர்த்துப் பூஜை செய்வதுண்டு. சோணபத்திரம் சோணா நதியில் கிடைக்கின்ற கூழான் கல், அவ்விதமே பாணம் நர்மதையிலும், ஸ்வர்ணமுகி குமுதவதி நதியிலும் ஸ்வர்ணமுகி நதியிலும், ஸாலக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகியிலும் ஸ்படிகம் வல்லம் முதலான இடங்களில் உள்ள தடாகங்களிலும் பானுமதி நதியிலும் பூமியினடியிலும் கிடைக்கின்றன. இவை உருவமுமல்ல, அருவமுமல்ல. அந்தந்த தேவதைகளின் ஆயதனம் - இருப்பிடம். இவற்றில் கணபதி முதலானோர் நிச்சயமாக ஆவாஹனம் முதலியதை எதிர்பாராமல் ஸான்னித்யம் கொண்டுள்ளார்கள். இவற்றில் பூஜை செய்யும்போது நம் உள்ளத்தில் குடி கொண்டவர்களே தியானத்தால் இரங்கி நம் பூஜையை ஏற்க இந்த ஆயதனங்களில் அருள் பரவி நிற்கிறார்கள் என்பதே கருத்து. இந்த வழிபாட்டிற்குத் தேவையானது சுத்தமான ஜலம், சந்தனம், பூ, தூப தீபங்கள், நிவேதனத்திற...

அறம் செய விரும்பு - 13

Image
வபனம் செய்ய நல்ல நாள் திங்கள், வியாழன், புதன், வெள்ளி நல்லது. ஞாயிறு, செவ்வாய், சனி, ஷஷ்டி, அஷ்டமி, பிரதமை, சிரார்த்த திதி, அமாவாசை, குரு சுக்ர மௌட்யம் உள்ள நாள், விஷுபுண்யகாலம் உதயத்திலிருந்து 2 நாழிகைகள், ஸாயங்காலம் இவை நல்லதல்ல. மாதா பிதாக்களின் சிராத்தமாதம் அல்லது சிராத்த பக்ஷம், விவாஹம், உபனயனம், சௌளம் இவற்றிற்குப்பின் ஒருவருஷம் அல்லது 6 மாதம், வபனம் கூடாது. உபனயனத்திற்குப்பின் உபாகர்மா ஆறு மாதத்திற்குள் இருந்தால் வபனம் உண்டு. ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள், தந்தையும் மகனும் ஒரே தினத்தில் வபனம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு வபனங்கள் வெவ்வெறு நிமித்தத்தால் ஒரே நாளில் நேருமானால் ஒன்றை மந்திரத்தால் செய்து பின் மற்றதை நேரிடையாகச் செய்யலாம். கிருஹக்ருத்யம் - வீட்டுப்பணிகள் ப்ராத: காலம் என்பது சூரியன் உதித்து 33/4 நாழிகைகள் (1.30 மணி). அதற்குள் ஸந்தியா வந்தனம் அக்னி உபாசனையும் முடிவடைகின்றன. பகல் போஜனத்திற்கு முன் பிரும்மயஜ்ஞம், தேவ பூஜை, வைச்வதேவம், அதிதி, விருந்தாளி, பிரம்மசாரி, ஸன்யாஸி இவர்களுக்கு உணவளித்தல் என்ற நான்கும் செய்யத்தக்கவை. ஸந்தியாவந்தனமும் ஒளபாஸனமும் ம...

அறம் செய விரும்பு - 12

Image
தர்ப்பத்தால் பவித்ரம் தரித்தல் பொதுவாக பிராமணன் செய்கின்ற நித்திய நைமித்திக கர்மங்களில் தர்ப்பத்தால் ஆசனம் ஆக அமைத்து அதன்மேல் உட்கார்ந்து மோதிரவிரலில் தர்பத்தால் ஆன பவித்ரத்தை தரித்து மேல் சில 2-4 தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு சங்கல்பம் செய்வர். தர்ப்பை ஆசனம் இல்லாவிடில் தர்ப்பங்களைப்பரப்பி அதன் மேல் உட்காரலாம். தர்ப்பம் மிகவும் புனிதமானது. தர்ப்பம்பட்ட கைகள், தர்ப்பத்தால் துடைக்கப்பட்ட பாத்திரங்கள், தர்ப்பம் பட்ட நீர், நெய் தரை முதலியவை தூய்மை பெறுகின்றன. ஸ்னானத்திற்கு ஸங்கல்பம் செய்வதிலிருந்து மந்திர பூர்வமாக செய்கின்ற பணிகள் அனைத்திலும் தர்ப்பமும் தர்ப்பத்தாலான பவித்ரமும் பயன்படுகின்றன. தர்ப்பத்திற்குப் பதிலாக தங்கத்தாலான பவித்ரம் என்ற மோதிரத்தை மோதிர விரலிலும் வெள்ளியாலானதை ஆட்காட்டி விரலிலும் தரிப்பர். தந்தையும் மூத்த சகோதரரும் உயிருடன் உள்ளவரை வெள்ளியாலானதைத் தரிப்பதில்லை. தாமிரம் 8 பங்கு, வெள்ளி 12 பங்கு, தங்கம் 11 பங்கு சேர்த்துச்செய்த திரிலோஹ மோதிரம் மிகவும் சிறந்தது. புண்ணியகருமங்கள் செய்யும் போது 2-4 தர்ப்பங்களாலும் பித்ருகர்மத்தில் (சிரார்த்தம் அமாவாசை தர்ப்பணம் ...

ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 7

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 7 பந்தஸ்வரூபம் - பிறப்பு எப்படி? புல்லறிவாண்மை அழியாத ஆத்மாவாக இருக்கின்ற ஜீவர்கள் அறியாமையினால் மூடப்பட்டு, உடல் அபிமானம் கொண்டு தான் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டதாக கருதுகிறார்கள். நிலையில்லாத உடலையும் உலகையும் நிலையானதாகக் கருதுகிறார்கள். எல்லாப் பொருள்களுள்ளும் மாறாத இருப்பாக இருப்பவர் இறைவன். ஆகவே அவர் மெய்ப்பொருள் எனப்படுகின்றார். மற்ற எல்லாப் பொருள்களும் மெய்ப்பொருளான இறைவன் மேல் நாம ரூபங்களாக - பெயர்வடிவங்களாக - மாயையினால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நாமரூபங்களில் மயங்குகின்ற ஜீவர்கள் நிலையில்லாத தோற்றமாத்திரமான உலகத்தினை உண்மை என்று நினைக்கும் கீழான அறிவை அடைகிறார்கள்.  நில்லாதவற்றை நிலையின என்றுணரும்  புல்லறி வாண்மை கடை . (திருக்குறள் 331) மருளானாம் மாணாப் பிறப்பு உயிர்களுக்கு ஒரு பிறவி அல்ல. பல பிறவிகள் உண்டு அப்படி பிறவிகள் தோன்றுவதற்கு காரணம் மருள் என்ற மயக்கம்  - அறியாமை. மெய்ப்பொருளை அறியாது பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று கருதி வாழ்க்கையை நடத்துவதே மருள். இந்த அறியாமையே பிறவிக்கு காரணமாக...

அறம் செய விரும்பு - 11

Image
ஸந்தியாவந்தனம் சூரியனின் உதயத்திற்கு முன் 2 நாழிகை (48 நிமிஷங்கள்) காலை நேரத்து ஸந்தியாவந்தனத்திற்கு முக்கியகாலம். உதயத்திற்குப் பின் 3 3/4நாழிகை (1 1/2 மணி நேரம் ) கௌணகாலம். உதயம் முதல் 11 நாழிகைக்குமேல் 15 நாழிகை வரை (10.30 மணி முதல் 12 மணிக்குள்) மாத்யான்னிகத்திற்கு முக்யகாலம். அஸ்தமனம்வரை கெளணகாலம் அஸ்தமனத்திலிருந்து 2 நாழிகை வரை மாலை ஸந்தியாவந்தனத்திற்கு உரியகாலம்.  ஸந்தியாவந்தனத்தில் அர்க்க்யப்ரதானம் முக்யம் என்பர். பிரும்மைவாஹமஸ்மி என்ற பிரும்ம-ஆத்ம ஐக்ய அனுஸந்தானம் முக்கியமெனச்சிலர். காயத்ரி ஜபமும் காயத்ரியின் உபஸ்தானமும் முக்யமெனச்சிலர். இவற்றை அந்த முக்கிய ஸந்தியா காலத்தில் செய்யவேண்டும் என்பதுதான் நோக்கம். உரிய முக்கிய காலம் தவறினால் காலாதீத பிராயச்சித்தம் என்று ஒரு அர்க்க்யம் கூட விடவேண்டுமென்றிருப்பதால் அர்க்ய ப்ரதானத்தையாவது உரியகாலத்தில் செய்ய வேண்டும். பகலும், இரவும் அவ்வாறே இரவும் பகலும் சந்திக்கும் வேளை சந்தியா காலம். அக்காலத்தில் செய்யப்படுகின்ற வந்தனம் ஸந்தியாவந்தனமாகும். அக்காலத்தில் தியானிக்க வேண்டிய தேவதையின் பெயர் ஸந்தியாதேவி. அவளுக்கான வந்தன...

அறம் செய விரும்பு - 10

Image
வஸ்திரதாரணம் - ஆடை உடுத்தல் மேலாடை (உத்தரீயம்) இடுப்பு வஸ்திரம் என இரண்டு ஆடைகள் எப்போதும் தரிக்க வேண்டும். உத்தரீயமின்றி ஒரு நற்கருமமும் செய்ய முடியாது. உத்தரீயத்தை இடுப்பிலும் இடுப்பாடையை உத்தரீயமாகவும் தரிக்கக்கூடாது. வெளுத்த ஆடை நல்லது. வேறு சாயம் உள்ள ஆடையை தரிக்கக் கூடாது. உலர்ந்த ஆடை உடுத்தியே நற்கருமங்கள் செய்ய வேண்டும். ஆடை உலர்ந்திராவிடில் ஈரவஸ்திரத்தை ஏழு தடவை காற்றில் உதறித் தரிக்கலாம். சணல் கம்பளி பருத்தி பட்டு இவற்றால் ஆடையை தரிக்கலாம். உத்தரியமில்லாத நிலையைத்தவிர்க்க கிருஹஸ்தன் மூன்று பூணூல்களைத் தரிப்பது உண்டு. இடது தோளின்மேல் பூணூல் போல் போட்டு வலது விலாப்புறமாகச் சுற்றி உத்தரீயத்தைத் தரிக்க வேண்டும். வஸ்திரம் தரித்தபின் இருதடவை ஆசமனம் செய்ய வேண்டும். வேண்டும். ஸ்னானத்தின் போது தரித்திருந்த இடுப்பாடையை நான்காய் மடித்து நிவீதியாய் நின்று மரத்தடியில் பிழியவேண்டும். "உச்சிஷ்ட பாகிநோ தாஸா: யே ம்ருதாஸ் தே த்வமந்த்ரகா: த்ருப்யந்து தருதாம் யாதா: மம ஸம்பந்த்திநோ நரா:" என்னோடு தொடர்புகொண்டு என் வீட்டில் மீதமுள்ள உணவை உண்டு எனக்குப் பணியாளாயிருந்தவர், இறந்து மந்தி...

அறம் செய விரும்பு - 9

Image
புண்யகாலத்தில் புண்ய தேசத்தில் ஸ்நானம் சிவலிங்கத்திற்கு எதிரில் உள்ள குளம் சிவகங்கை எனப்படும். விஷ்ணுவின் ஆலயத்தின் அருகில் உள்ள குளம் விஷ்ணுகங்கை எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்யப் பாவமனைத்தும் நீங்கும். சித்திரை மாதத்து கிருஷ்ண சதுர்தசியில் சிவகங்கையில் நீராடுவது மிகச்சிறந்தது. கார்த்திகை பவுர்ணமியில் புஷ்கரத்திலும் மாசி பௌர்ணமியில் பிரயாகையிலும் செவ்வாய்க்கிழமை கூடிய அமாவாசையில் கங்கையிலும் ஸ்நானம் செய்வது மிகச்சிறந்தது. ஜன்ம நக்ஷத்திரம், பூசம், வ்யதீபாதம், வைத்ருதி, ஞாயிறு- செவ்வாய்-சனிக்கிழமைகள் இவைகளில் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது சிறந்தது. மாசியில் சுக்லஸப்தமியில் புண்ய நதியில் அருணோதயத்தில் ஸ்நானம் செய்வது சூரியகிரகண ஸ்நானத்தை ஒத்தது. புதன்கிழமை புனர்வஸு கூடியிருந்தால் நதியில் நீராடுவது வாஜபேயயாகம் செய்த பலனைத்தரும். ஏகாதசியில் நெல்லிக்காய் தேய்த்துப்பின் ஸ்நானம் செய்வது விஷ்ணுவின் அருளைப்பெறச் செய்யும். பெரும் செல்வத்தை விரும்புபவன் த்விதீயை, ஷஷ்டி, ஸப்தமி, நவமி, தசமி, திரயோதசி, அமாவாசை, பௌர்ணமி, ஸங்கிரமணம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் நெல்லிக்காய் தேய்த்...