Hindumatha Dharma Vilakkam - 08


பாடம்- 8 

பொதுதர்மம் தொடர்ச்சி

எட்டு ஆத்ம குணங்கள் 
1)தயா - கருணை
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி அன்புகொண்டு இரக்கம் கொண்டு வாழ்தல்
2)க்ஷமா - பொறுமை
பிறரால் நமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.
3) அநஸூயா - பொறாமையின்மை
நம்மிடம் இல்லாமல் பிறரிடம் இருக்கும் செல்வங்களை குறித்து பொறுத்துக் கொள்ள முடியாத தன்மை.
4) சௌசம் = தூய்மை
அகத்தூய்மை - விருப்பு வெறுப்பு கோபம் போன்ற தீய குணங்கள் இல்லாமல் நற்குணங்களோடு இருக்கும் மனம்.
புறத்தூய்மை - உடல், உடை, இருப்பிடம் போன்ற எல்லா விஷயங்களிலும் தூய்மையைக் கடைபிடித்தல், தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்தல்.

5) அனாயாஸம் = சிரமம் இன்மை
சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். அதிகப்படியான உழைப்பு, ஓய்வின்மை, மன பாரம், தேவையற்ற சிந்தனைகள் போன்றவை இல்லாமல் வாழ்க்கையை இலகுவாக வாழ்தல்.
6) மங்களம் = நன்மை 
நடை, உடை, பாவனைகளில் உயர்ந்த வற்றை கடைப்பிடித்தல். அமங்கலமான சொற்கள் அலங்காரம், நடத்தை போன்றவற்றைத் தவிர்த்தல். பண்பாடான நடத்தை.

7)அகார்ப்பண்யம் = கருமித்தனமின்மை
தானும் அனுபவித்து மற்றவர்களும் தர்மம் முதலானவற்றைச் செய்து அனுபவிக்க செல்வத்தை பயன்படுத்துதல்.
சொற்கள், மனம் , அறிவு போன்றவற்றிலும் கருமித்தனம் இல்லாமல் இருத்தல்.
8) அஸ்ப்ருஹா - பற்றின்மை
ஸ்ப்ருஹா என்றால் பற்று. அஸ்ப்ருஹா என்றால் பற்றின்மை. உறவுகள் உடைமைகள் பதவிகள் போன்றவற்றில் தீவிர பற்று இல்லாமல் இருத்தல். உலக வாழ்க்கை நிலையற்றது என்று புரிந்துகொண்டு தாமரை இலை தண்ணீர் போல வாழ்தல்.
3️⃣ சமயச் சடங்குகள்

16 சம்ஸ்காரங்கள்
1. கர்ப்பாதானம்
2. பும்ஸவனம் (3ம் மாதம்)
3. சீமந்தம் (6 அ 8ம் மாதம்)
4.  ஜாத கர்மா
5. நாமகரணம் (11ம் நாள்)
6. நிஷ்க்ரமணம் (3ம் மாதம் அக்னி சந்திரதரிசனம். 4ம் மாதம் வெளியே கோயிலுக்குச் செல்வது ஈஸ்வர தரிசனம்)
7. அன்னப்பிராசனம் (6 ம் மாதம்)
8. சூடாகர்ணம் ( சௌளம்) முடியெடுத்தல் (1 - 5 வயது)
9. கர்ணவேதநம் - காதுகுத்துதல்
10. அக்ஷராரம்பம் வித்யாரம்பம் (4 - 5 வயது)
11. உபநயனம் ப்ரஹ்மோபதேசம் (6-8 வயது) 
12. ப்ரைஸார்த்தம் - வேதம் படிக்கத் தொடங்குதல்
13. கேஷாந்தம் - ஆண் - 16 வயதில் செய்யும் சிறுசடங்கு
 ருதுசுத்தி ( பெண் - பூப்பூச் சடங்கு)
14. ஸமாவர்தநம் அவப்ருத ஸ்நாநம் (கல்வியின் நிறைவு)
15. விவாகம்
16. அந்த்யேஷ்டி - இறுதிச்சடங்கு.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101