கடவுளின் ஞானம்
ஓம்
கடவுளின் ஞானம்
எங்கும் கடவுளின் நாதத்தை கேட்டான் -
இசைக்கலை வந்தது.
எங்கும் கடவுளின் காட்சியைக் கண்டான் -
சிற்பக்கலை வந்தது.
எங்கும் கடவுளின் அழகைக் கண்டான் -
ஓவியக்கலை வந்தது.
எங்கும் கடவுளின் நடனத்தைக் கண்டான் -
நாட்டியக்கலை வந்தது.
எங்கும் கடவுளின் அறத்தைக் கண்டான் -
போர்க்கலை வந்தது.
எங்கும் கடவுளின் விதியை கண்டான் -
விஞ்ஞானம் வந்தது.
எங்கும் கடவுளின் அன்பைக் கண்டான் -
காதல்க்கலை வந்தது.
எங்கும் கடவுளின் அமைதியை கண்டான் -
யோகக்கலை வந்தது.
எல்லாக் கலைகளையும் கடவுளிடம் கண்டான் -
எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான்.
எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான்.
கடவுளிடம் உலகத்தைக் கண்டான் -
உலகத்தில் கடவுளைக் கண்டான்.
உலகத்தில் கடவுளைக் கண்டான்.
உள்ளும் புறமும் கடவுளைக் கண்டான் -
சொல்லும் பொருளுமற்றுச் சும்மாயிருந்தான்.
சொல்லும் பொருளுமற்றுச் சும்மாயிருந்தான்.
Comments