கடவுளின் ஞானம்


ஓம்



கடவுளின் ஞானம்


எங்கும் கடவுளின் நாதத்தை கேட்டான் - 
இசைக்கலை வந்தது.

எங்கும் கடவுளின் காட்சியைக் கண்டான் -
சிற்பக்கலை வந்தது. 

எங்கும் கடவுளின் அழகைக் கண்டான் -
ஓவியக்கலை வந்தது.

எங்கும் கடவுளின் நடனத்தைக் கண்டான் -
நாட்டியக்கலை வந்தது. 

எங்கும் கடவுளின் அறத்தைக் கண்டான் -
போர்க்கலை வந்தது.

எங்கும் கடவுளின் விதியை கண்டான் -
விஞ்ஞானம் வந்தது.

எங்கும் கடவுளின் அன்பைக் கண்டான் -
காதல்க்கலை வந்தது.

எங்கும் கடவுளின் அமைதியை  கண்டான் -
யோகக்கலை வந்தது.

எல்லாக் கலைகளையும் கடவுளிடம் கண்டான் - 
எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான். 

கடவுளிடம் உலகத்தைக் கண்டான் - 
உலகத்தில் கடவுளைக் கண்டான். 

உள்ளும் புறமும் கடவுளைக் கண்டான் -  
சொல்லும் பொருளுமற்றுச் சும்மாயிருந்தான்.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101