அவன்தான் அவன் !

ஓம்




அவன்தான் அவன் !

எல்லாம் கடவுள் என்றறிந்தவன்
கடவுளுக்கு ஆலயம் வைத்தான்.
ஆலயத்துள் எல்லாம் வைத்தான்.

எல்லா கலைகளையும் கடவுளிடம் கண்டவன்
எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான்.
எல்லாக் கலைகளையும் ஆலயத்துள் வைத்தான்.
இயலில் இசையில் நாடகத்தில்
நடனத்தில் ஓவியத்தில் சிற்பத்தில் கடவுளை வடித்தான்.

எல்லா உணர்வுகளும் கடவுளாலேயே என்று கண்டவன்
எல்லா உணர்வுகளிலும் கடவுளை வைத்தான்.
வீரத்திலும் கோபத்திலும்  கருணையிலும்
காதலிலும் கடவுளை வடித்தான்.

எல்லா ஆசாபாசங்களும் அவனாலேயே என்றறிந்தவன்
அவனிடத்திலேயே அனைத்தையும் வைத்தான்.
தாயாய் தந்தையாய் கணவனாய் மனைவியாய்
குழந்தையாய் அண்ணனாய் தங்கையாய் கடவுளை வடித்தான்.

எல்லா உயிர்களும் அவனே என்றுணர்ந்தவன்
எல்லா உயிர்களாயு
ம் அவனை வைத்தான்.
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் பறவையாய் விலங்காய்
மீனாய் பாம்பாய் தேவனாய் கடவுளை வடித்தான்.

கடவுளையே உலகமாகக் கண்டவன்
வாழ்க்கையையே வழிபாடாக வைத்தான்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
என்று உரக்கப் பாடினான்.
அவன் தான் யோகி.
அவன் தான் ஞானி.
அவன்தான் சித்தன்.
அவன்தான் அவன் !


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101