Posts

Showing posts from July, 2020

Hindumatha Dharma Vilakkam - 08

பாடம்- 8  பொதுதர்மம் தொடர்ச்சி எட்டு ஆத்ம குணங்கள்  1)தயா - கருணை எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி அன்புகொண்டு இரக்கம் கொண்டு வாழ்தல் 2)க்ஷமா - பொறுமை பிறரால் நமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல். 3) அநஸூயா - பொறாமையின்மை நம்மிடம் இல்லாமல் பிறரிடம் இருக்கும் செல்வங்களை குறித்து பொறுத்துக் கொள்ள முடியாத தன்மை. 4) சௌசம் = தூய்மை அகத்தூய்மை - விருப்பு வெறுப்பு கோபம் போன்ற தீய குணங்கள் இல்லாமல் நற்குணங்களோடு இருக்கும் மனம். புறத்தூய்மை - உடல், உடை, இருப்பிடம் போன்ற எல்லா விஷயங்களிலும் தூய்மையைக் கடைபிடித்தல், தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்தல். 5) அனாயாஸம் = சிரமம் இன்மை சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். அதிகப்படியான உழைப்பு, ஓய்வின்மை, மன பாரம், தேவையற்ற சிந்தனைகள் போன்றவை இல்லாமல் வாழ்க்கையை இலகுவாக வாழ்தல். 6) மங்களம் = நன்மை  நடை, உடை, பாவனைகளில் உயர்ந்த வற்றை கடைப்பிடித்தல். அமங்கலமான சொற்கள் அலங்காரம், நடத்தை போன்றவற்றைத் தவிர்த்தல். பண்பாடான நடத்தை. 7)அகார்ப்பண்யம் = கருமித்தனமின்மை தானும் அனுபவித்து மற்றவர்களும...

Hindumatha Dharma Vilakkam - Chapter 07

ஓம் பாடம்  - 7 பொது தர்மம் தொடர்ச்சி உலகியல் லட்சியங்கள் குறுகிய காலத்தில் முடிந்து விடுபவை. ஆனமிக லட்சியமான வீடுபேறு, நீண்ட நெடும் பயணம். ஒரு வாழ்க்கையில் மட்டுமல்ல, பல பிறவிகளில் தொடர்ந்து செய்யப்படுகின்ற சாதனை. தர்மம் பக்தி ஞானம் தர்மம் - சாமான்ய தர்மம், விசேஷ தர்மம் சாமான்ய தர்மம் - தொடர்ச்சி சென்ற வாரம் யமம் நியமம் பற்றிப் பார்த்தோம் இனி மேலும் சில நற்பண்புகள்... ஆசார வித்துக்கள் ஆசாரத்திற்கு காரணம் எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும். அவை:- நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. - ஆசாரக்கோவை 1. நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுடன் இருத்தல். காண்க: திருக்குறள் செய்நன்றி அறிதல். பொறையுடைமை - பிறர் செய்யும் தீமையைச்  பொறுத்துக் கொள்ளுதல். காண்க: திருக்குறள் பொறையுடைமை. இன்சொல் - வாய்மை - இனிமையும் உண்மையுமான சொற்களையே எப்பொழுதும் பேசுதல். ...

நீ நீ மாத்திரமே!

Image
ஓம் நீ நீ மாத்திரமே ! உண்மைப்பொருளான உன்னிடத்தில் பொய்த்தோற்றங்கள்  வந்துபோகின்றன. அறிவு வடிவான உன்னிடத்தில்  அறியாமை வந்து போகின்றது. ஆனந்தக்கடலான உன்னிடத்தில் துன்ப அலைகள்  வந்து போகின்றன. நீ பூர்ணமானவன்! நீ வரையறையில்லாதவன்!  நீ நீ மாத்திரமே! மற்ற அனைத்தும்  வெற்றுக் கற்பனைகளே !!

அவன்தான் அவன் !

Image
ஓம் அவன்தான்  அவன் ! எல்லாம் கடவுள் என்றறிந்தவன் கடவுளுக்கு ஆலயம் வைத்தான். ஆலயத்துள் எல்லாம் வைத்தான். எல்லா கலைகளையும் கடவுளிடம் கண்டவன் எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான். எல்லாக் கலைகளையும் ஆலயத்துள் வைத்தான். இயலில் இசையில் நாடகத்தில் நடனத்தில் ஓவியத்தில் சிற்பத்தில் கடவுளை வடித்தான். எல்லா உணர்வுகளும் கடவுளாலேயே என்று கண்டவன் எல்லா உணர்வுகளிலும் கடவுளை வைத்தான். வீரத்திலும் கோபத்திலும்  கருணையிலும் காதலிலும் கடவுளை வடித்தான். எல்லா ஆசாபாசங்களும் அவனாலேயே என்றறிந்தவன் அவனிடத்திலேயே அனைத்தையும் வைத்தான். தாயாய் தந்தையாய் கணவனாய் மனைவியாய் குழந்தையாய் அண்ணனாய் தங்கையாய் கடவுளை வடித்தான். எல்லா உயிர்களும் அவனே என்றுணர்ந்தவன் எல்லா உயிர்களாயு ம்  அவனை வைத்தான். ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் பறவையாய் விலங்காய் மீனாய் பாம்பாய் தேவனாய் கடவுளை வடித்தான். கடவுளையே உலகமாகக் கண்டவன் வாழ்க்கையையே வழிபாடாக வைத்தான். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்று உரக்கப் பாடினான். அவன் தான் ய...

கடவுளின் ஞானம்

Image
ஓம் கடவுளின் ஞானம் எங்கும் கடவுளின் நாதத்தை கேட்டான் -  இசைக்கலை வந்தது. எங்கும் கடவுளின் காட்சியைக் கண்டான் - சிற்பக்கலை வந்தது.  எங்கும் கடவுளின் அழகைக் கண்டான் - ஓவியக்கலை வந்தது. எங்கும் கடவுளின் நடனத்தைக் கண்டான் - நாட்டியக்கலை வந்தது.  எங்கும் கடவுளின் அறத்தைக் கண்டான் - போர்க்கலை வந்தது. எங்கும் கடவுளின் விதியை கண்டான் - விஞ்ஞானம் வந்தது. எங்கும் கடவுளின் அன்பைக் கண்டான் - காதல்க்கலை வந்தது. எங்கும் கடவுளின் அமைதியை  கண்டான் - யோகக்கலை வந்தது. எல்லாக் கலைகளையும் கடவுளிடம் கண்டான் -  எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான்.  கடவுளிடம் உலகத்தைக் கண்டான் -  உலகத்தில் கடவுளைக் கண்டான்.  உள்ளும் புறமும் கடவுளைக் கண்டான் -   சொல்லும் பொருளுமற்றுச் சும்மாயிருந்தான்.

Hindu matha Dharma Vilakkam - Chapter 06

பாடம் - 06 யமம், நியமம் இறைவனை வழிபடும் முறைகள் வாழ்க்கையே வழிபாடு தர்மம்  பக்தி ஞானம் தர்மம் 1) ஸாமான்ய தர்மம் 2) விஷேச தர்மம் 1) ஸாமான்ய தர்மம் - யமம் , நியமம் 1.யமம் :  அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம், ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம். அ)அஹிம்ஸா  -  ஹிம்சை செய்யாமை ஆ) ஸத்யம் - வாய்மை - பொய்பேசாமை யதா த்ருஷ்டம் யதா ச்ருதம் யதா அநுமிதம் ததா வதநம். எதை ப்  பார்த்தோமோ எதைக் கேட்டோமோ எதை எவ்வாறு சிந்தித்தோமோ அப்ப டி யே கூறுதல்.  i) உள்ளதை உள்ளவாறு கூறுதல். ii) (ஹிம்சை ஏற்படுமெனின், ஹிதமாக இருக்காது எனில்) உண்மையை மறைத்தாலும் வாய்மையாகும். iii) (நன்மை ஏற்படும் எனில்) பொய்மையும் வாய்மையாகும். பலன் - மனத்தூய்மை, மனபாரமின்மை, மனவலிமை (பயமின்மை), புண்ணியம், மற்ற ஸாதனைகளை பின்பற்ற தகுதி. இ) அஸ்தேயம் - திருடாமை அசாஸ்த்ரபூர்வக பரத்ரவ்ய ஸ்வீகாரம் உள்ளத்தால் உள்ளலும்.. திருக்குறள் காரணம் - தமோகுணம் (சோம்பல், மோஹம்) விடும்வழி - தன்மானம் வள...

எது பகுத்தறிவு ?

ஓம் எது பகுத்தறிவு ? ஸ்வாமி பூர்ணாநந்த ஸரஸ்வதி கருப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து மத வெறுப்பர் கூட்டம் புராணங்களை ஆபாச புராணம் என்று பேசி வருகின்றது . நாங்கள் ஆபாசமாகப் பேசவில்லை புராணங்களில் உள்ளதையே சொல்லுகின்றோம் என பகுத்தறிவு என்று ஆபாசம் பேசுபவர்கள் சொல்லுகிறார்கள் . ஆபாசம் என்பது என்ன ? ஆபாசம் என்பது பொருளில் உள்ளதா ? பார்வையில் உள்ளதா ? நிர்வாணம் என்பது இயல்பாக இருப்பது . அது எப்பொழுது ஆபாசம் ஆகின்றது ? காம நோக்கோடு பார்க்கப்படும்பொழுதே வெளிப்படுத்தப்படும்பொழுதே அல்லவா ? உடலின் நிர்வாணம் ஆபாசம் அல்ல . எல்லா விலங்குகளும் எப்பொழுதும்   நிர்வாணமாகவே இருக்கின்றன . அது ஆபாசமாக கருதப்படுவது இல்லை . ஆடைகளுக்குள் அனைவரும் நிர்வாணமானவர்களே . அது காமத்தோடு பார்க்கப்பட்டு காமத்தைத் தூண்டும் விதமாக வெளிப்படுத்தப்படுகின்ற பொழுதே ஆபாசம் ஆகின்றது . புராணங்களில் ஆபாசம் இல்லை . அது காமுகர்களால் ஆபாசமாகப் பார்க்கப்பட்டு , விமர்சிக்கப்படுகின்றது என்பதே உண்மை .  உண்மையை தேடும் பகுத்தறிவு என்று , ஆ...