Posts

Showing posts from June, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 3

ஓம் ஹிந்துமத தர்ம விளக்கம் பாடம் - 3 கடவுள் எப்படி இருக்கிறார் ? கடவுளின் ஸ்வரூபம் ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம. சச்சிதானந்தம் ஒருபொருள் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் தேவை: 1.உபாதான காரணம் - மூலப் பொருள் அல்லது கச்சாப்பொருள். 2. நிமித்த காரணம் - அறிவுக் காரணம். இந்த உலகத்திற்கு கடவுளே உபாதான காரணமும் நிமித்த காரணமும், சிலந்தி வலைக்கு சிலந்திப் பூச்சி போல. காரணத்தில் உள்ளது காரியத்திலும் தொடர்ந்து இருக்கும் தங்க நகை போல. எனவே,காரியத்தை ஆராய்வதன் மூலம் காரணத்தை புரிந்துகொள்ள முடியும். ஆகவே, நாம் யாரென்று ஆராய்வதன் மூலம் எனக்கு மூலமான காரணமான கடவுள் யார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நான்... இருக்கிறேன் - ஸத். அறிகிறேன் - சித். உறக்கத்தில் கால தேச வஸ்து வரையறை இல்லாமல் இருக்கிறேன் - அனந்தம். ஆநந்தமாகத் தூங்கினேன்  - ஆநந்தம். ஸத் சித் அனந்தம் ஆனந்தம் ஆத்மா = ஸச்சிதாநந்தம் ப்ரஹ்ம. உலகம் தோன்றுவதற்குக் காரணமாக ஒன்று இருந்தது - ஸத். அதுவே அறிவுப் பொருளாகவும் இருந்தது ஆகவே அது - ஞானம் / சித். அது தோற்றமும் மறைவும் அற்றதாக...

Hindumatha Dharma Vilakkam - Chapter 2

ஓம் ஹிந்துமத தர்ம விளக்கம் பாடம் - 2 சென்ற வகுப்பில் பார்த்தது... மனித இனம் அறிவால் வளரவில்லை; தேய்ந்து கொண்டிருக்கிறது. நம்முன்னோர்கள் சொன்னது, வாழ்ந்தது “உயர்ந்த சிந்தனை எளிய வாழ்க்கை. ஆனால் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருப்பது Hitech வாழ்க்கை Lowclass சிந்தனை. நம் முன்னோர்கள் "குறைவான தேவைகளோடு குறைவான பொருள்களோடு மிகுதியான உறவுகளோடு நிறைவாக வாழ்ந்தார்கள். இன்று நாம் மிகுதியான தேவைகளோடு மிகுதியான பொருட்களோடு ஆனால் குறைவான உறவுகளோடு குறைவான மனநிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வின் குறிக்கோள்: இன்பம். அறவழியில் வந்த பொருளால் சிற்றின்பம், அருள்‌வழியில் வரும் ஆத்மஞானத்தால் பேரின்பம். அதற்கு முதல் ஸாதனம் அறம் என்ற தர்மம். தர்மம் என்பது யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கு செய்யாதிருத்தல். பலன் : மனத்தூய்மை, இன்பம், புகழ், புண்ணியம். இனி…. கடவுள் ஏன் இருக்கிறார்? தர்மத்தைச் செய்யவேண்டுமென்றால் தர்மத்தில் சிரத்தை ஏற்படவேண்டும்; தர்மத்தில் சிரத்தை ஏற்படவேண்டுமென்றால் தர்மத்தை விதித்த கடவுள் மேல் சிரத்தை ஏற்படவேண்டும்; கடவுள் மேல் சிர...

Viveka Chintamani - விவேக சிந்தாமணி - பாகம் 2

ௐ விவேக சிந்தாமணி - பாகம் 2 உரை: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதி 01.எதற்கும் பயன்படாதவன் கல்லாலயமாம் தேவருமாம், கழுதை கசடர் பொதி சுமக்கும், கடாவோ உழுது பயிரிடற்காம், காட்டம் பன்றிக்கிரையாகும், புல்லேறு ஈசர் வாகனமாம் பொதியுஞ்சுமக்கும், பிணமதுவும் பூசிமுடித்து மறையோர்க்கும் பொருளையீந்து புகழெய்தும், மல்லார் குட்டிச்சுவர் தானும் மறைவா(ம்) மாடுதேய்த்திடற்காம், மதியாத் துடைப்பம் தினந்தோறு(ம்) மாடகூடங்களை விளக்கும், அல்லார் உலுத்தன் எதற்குதவும்? அவனுக்கிணை இங்கெதுவுமிலை, அவனைக்குறித்துக் கூறுமிடத்தவனுக்கவனே சரிதானே. கல்லானது ஆலயம் கட்டப் பயன்படும், தெய்வச் சிலைகளையும் செய்யலாம்; கழுதை பொதி சுமக்கப் பயன்படும்; எருமைக்கடா உழுது பயிரிடப் பயன்படும்; மலமும் பன்றிக்கு உணவாகும். எருது ஈஸ்வரனுக்கு வாகனமாகும், பொதி சுமக்கப் பயன்படும்; செத்த பிணமும்கூட சந்தனம் முதலியவை பூசி மலர்சூடி அந்தணருக்கு பொருளை தன்பொருட்டு தானமாகக் கொடுத்து (கொடுக்கச் செய்து) புகழ் எய்தும்; வலிமையுடைய குட்டிச் சுவரும் மறைவிடமாகும், மாடு முதுகு தேய்த்துத் தினவு தீர்க்க உதவியாகும்; உயர்வாக மதிக்கப்படாத துடைப்பமு...