Posts

Showing posts from February, 2020

அறம் செய விரும்பு -3

அறம் செய விரும்பு - 3 நன்முயற்சி நல்ல பலனைத்தரும் - விதி குறுக்கிடாதவரை. நாம் முன்செய்த புண்ணிய பாவங்களின் பின்விளைவே இந்த விதி. நம் முன்செயல் நல்லதாயின் அது நம்மையும் கெட்டதாயின் தீமையையும் விளையச் செய்கிறது. இந்த விதியை இன்று நாம் செய்கின்ற நல்வினையும் தீவினையும் தூண்டிவிடுகின்றன. விதியை ஒட்டி அமைந்த நம் மனப்பாங்கை இன்றைய நற்செயல் கட்டுப்படுத்துகிறது. நற்செயலில் நாம் எப்போதும் ஈடுபடும்படி இந்த ஆந்ஹிக நியமங்கள் நெறிப்படுத்தும். அதனால் முன் செய்த தீவினைப் பயனாகக் கெட்டதை நாடுகின்ற மனத்தை இந்த நியமங்கள் கட்டுப்படுத்தி நல்லதைப் பின்பற்றும்படி அடக்கி ஆளும்போது இந்த நியமங்கள் விதியை மாற்ற வல்லதாகின்றன. எந்த நற்பணியை மேற்கொள்ளும் போதும் "மம உபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா" - "பலன் தர முனைந்துள்ள எனது எல்லாக் கெட்ட முன் வினைகளும் தேய்வுறச்செய்வதன்மூலம்" - என்று ஸங்கல்பம் செய்து கொள்கிறோம். அப்படி விதியை மாற்றவல்லவை இந்த ஆந்ஹிக நியமங்கள். ‌"நான்" "எனது" என்று ஒவ்வொரு செயலிலும் அகந்தை மமதை கொள்வது இயல்பு. ஆனால் நம் நிலை அகந்தை மமதை கொள்ள சிறிதும் தக...

கடவுள் இருக்கிறாரா ?

Image
கடவுள் இருக்கிறாரா? கடவுள் பற்றி இந்துமத வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள வேதாந்தம் எனப்படுகிற உபநிஷத்துகள் என்ன சொல்லுகின்றன என்பதைப்பற்றி சொல்லுகின்றேன். ஒருபொருள் தோன்றுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் தேவை. ஒன்று மூலகாரணம், மற்றொன்று அறிவுக் காரணம். உதாரணமாக பானை இருக்கிறது என்றால் பானை தோன்றுவதற்கு மண் மூலகாரணம் அதாவது மூலப்பொருள். குயவன் அறிவுக்காரணம் அல்லது உயிர்க்காரணம். ஆகவே பானை இருக்கிறது; பானைக்கு மூலப்பொருளாக மண் இருக்கிறது; (மண்ணே பானையாக ஆகி இருக்கின்றது.) மண்ணைப் பானையாக ஆக்கிய குயவன் இருக்கின்றான். அதுபோல உலகம் இருக்கிறது என்றால் உலகம் தோன்றுவதற்கான மூலப்பொருளும் அறிவு பொருளும் இருக்க வேண்டும் அல்லவா! அதுவே கடவுள். மண்ணை பானையாக ஆக்கிய குயவன் போல் உலகை ஆக்கியவர் கடவுள். குயவன் பானையை செய்வதற்கான மூலப் பொருளான மண்ணை பூமியிலிருந்து எடுத்தது போல கடவுள் உலகை படைப்பதற்கான மூலப்பொருளை எங்கிருந்து எடுத்தார் என்ற கேள்வி வரலாம். கடவுள் உலகைப் படைக்க வேறு எங்கிருந்தோ மூலப்பொருளை எடுத்தார் என்று சொன்னால் அந்த மூலப்பொருளை  எதிலிருந்து எப்பொழுது யார் படைத்த...

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

ஓம் ஆசாரக் கோவை ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார் உரை : ஸ்வாமீ பூர்ணாநந்ந ஸரஸ்வதீ ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். ரிஷிகள், ஸம்ருதிகள் எனப்படும் நீதிநூல்களில் அருளிய ஸதாசாரங்களை தொகுத்து வழங்கியது ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். இந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம். பாடல் 1 : ஆசாரத்திற்கு காரணம் நன்றி யறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத்தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து. நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும். அவை:- நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுட...