Posts

Showing posts from April, 2020

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 9

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 9 மோக்ஷஸ்வரூபம் - வீடு எது? இருள்நீங்கி இன்பம் பயக்கும் வேதாந்த நூல்களைக் குருவாயிலாகக் கேட்டு, பரம்பொருள் ஒன்றே மெய்பொருள்; அந்த பரம்பொருளே அனைத்துமாக இருக்கின்றது; உலகவேறுபாடுகள் எல்லாம் வெறும் தோற்றமாத்திரம் என்று புரிந்து கொள்வதுடன் - இந்த உண்மை நம் இதுநாள்வரையிலான அனுபவத்திற்கு மாறாக இருப்பதால் - இதில் ஏற்படுகின்ற சகலசந்தேகங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும். தெளிவை ஏற்படுத்திக் கொண்டபின் அந்த அறிவிலேயே மனதை நிலைநிறுத்தினால் விடுதலையானது உடனே சித்திக்கும். இந்த உலக இன்பங்களைவிட மேலான ஆனந்தம் நமக்கு இங்கேயே இப்பொழுதே கிடைக்கும். இது ஜீவன்முக்தி.  ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்  வானம் நணிய துடைத்து. (திருக்குறள் 353) இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி  மாசுஅறு காட்சி யவர்க்கு. (திருக்குறள் 352) மற்றீண்டு வாரா நெறி மெய்யுணர்ந்து அவாஅறுத்து ஜீவன் முக்தரானவர் எல்லாவிதமான மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவராய், புண்ணிய பாவம் அழிந்து போனவராய் ஆகிறார். இவர் ப்ரஹ்மநிஷ்டர். இவர் பிறவிக்குக் காரணமான அஜ...

ஸநாதன தர்மமும் திருக்குறளும் -8

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 8 ஸாதநஸ்வரூபம் - வீடுபெறும்வழி தலைப்பட்டார் தீரத் துறந்தார் இறைவன் அருளாலும் தன் புண்ணியச் சேர்க்கையினாலும் உலகின் நிலையாமையைப் புரிந்து கொள்ளுகின்ற பக்குவம் அடைந்த ஜீவர்கள் பிறவியில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். குருவருளால் மெய்யுணர்ந்து, அவா அறுத்து, வீடுபேற்றை அடைய விழைகிறார்கள். அதற்குத் துறவறம் உறுதுணையாக இருக்கிறது. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (திருக்குறள் 23) தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (திருக்குறள் 348) சார் தரும் நோய் சார்தரா! இந்த உலகப்பொருள்கள் எல்லாம் மெய்ப்பொருளான பரம்பொருளை சார்ந்து இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு உலகப்பொருள்களின் மேல் இருக்கும் சார்பை - பற்றை - விடுத்து பரம்பொருளை சார்ந்து வாழுகின்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டால், துன்பத்தைத் தருகின்ற பிறவியில் இருந்து விடுவித்து பிறவாத நிலையை அருளுவார் இறைவன். சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய். (திருக்குறள் 359) பற்றுக பற்றற்றான் பற்றினை உலகப...

அறம் செய விரும்பு - 22

Image
சுத்தமானதும் சுத்தமாக்குவதும் எப்போதும் சுத்தமானவை நெருப்பு, நீர்நிரம்பிய கமண்டலு, பசுவின் பின்புறம், யானையின் முன்புறம், ஆடு-குதிரைவாய், குழந்தை, பிரம்மசாரி எடுத்த பிக்ஷை அன்னம், சூரியகிரணம், காற்று, தேனீ, ஜலத்திலுள்ள உயிரினங்கள், உபனயத்திற்குமுன் உள்ள பாலன், விவாகமாகாத வயதுக்குட்பட்ட கன்னி, வாகனம், ஓடம், வழி, புல்தரை இவை எப்போதும் சுத்தமானவை. எப்போதும் அசுத்தமானவை மலம், மூத்திரம், ரத்தம், கொழுப்பு முதலியவை. சுத்தி பெற உதவுபவை காலம், நெருப்பு, ஸம்ஸ்காரம், காற்று, மண், ஞானம், தவம், பச்சாதாபம், உபவாஸம் இவை சுத்திபெற விரும்புபவனுக்கு உதவுபவை. சிலவற்றில் சூழ்நிலையிலுள்ளவை ஒட்டிக்கொண்டு அழுக்காகப்பற்றும். இவை அப்பழுக்கு, லேபம். உயிரினங்களின் கழிவுப்பொருள் உடலின் உள்ளிருந்து வெளிப்படும்போது அழுக்காகும். இவை மலம். இவ்விரு அழுக்குகளையும் செயற்கையாகப் போக்க முடியும். எண்ணத்தில் அல்லது அறிவில் அழுக்கிருந்தால் உபவாஸம், பச்சாத்தாபம், தவம், ஞானம் இவை மட்டுமே சுத்தப்படுத்தும்.  தங்கம், சங்கு, முத்து, ரத்தினம், வெள்ளி இவைகளில் உள் அழுக்கு இல்லை. அதனால் மேல் அழுக்கை ஜலம் ...

அறம் செய விரும்பு - 21

பொதுவான தர்மங்கள் தொடர்ச்சி.. மெழுகிக் கோலமிட்ட வீட்டில் லஷ்மி வசிப்பாள். ஒழுங்காக ஆடை தரித்துள்ளவர்களிடம் லஷ்மி வசிப்பாள். ஆடு, கழுதை, ஒட்டகம், துடைப்பம் இவற்றின் புழுதி, பிறரின் மூச்சுக்காற்று, ஆடைக்காற்று, முறத்தால் அசையும் காற்று இவை உடலில் பட்டால் லஷ்மி மறைவாள். ஆடையற்றவனையும் கச்சமில்லாதவனையும் கௌபீனம் மட்டும் தரித்து வெளியில் வருபவனையும் லஷ்மி விரும்பமாட்டாள். காலணி, குடை, தண்ணீர் பாத்திரம், துணைவர் இவையின்றி பெருவழி நடக்கக்கூடாது. பகலில் தலையைத் துணியால் மூடியும், இரவில் மூடாமல் வழிநடக்கக் கூடாது. தன் வயது, செல்வம், குடும்ப ரகசியம், வருவாய், கொடுக்கல் வாங்கல், அவமானம் இவற்றைப் பிறரிடம் வெளியிடக்கூடாது. தம்பதிகள் பெற்ற உடல்உறவு, குருவிடம் பெற்ற மந்திரம், தான்சாப்பிடும் மருந்து இவற்றையும் வெளியிடக்கூடாது. ஆண் விளக்கேற்றுவதும் அணைப்பதும், பெண் பூசணிக்காயைப் பிளப்பதும் கூடாது. பிறர் தும்பினால் 'க்ஷேமமாயிரு' என்று உடன் சொல்ல வேண்டும். தடுக்கி விழுந்தால் விழுந்த இடத்திலுள்ள மண்ணை நெற்றியில் இடவேண்டும். கொட்டாவி விட்டால் கையால் வாயை மூடிப் பின் வலது...

அறம் செய விரும்பு - 20

பொதுவான நியமங்கள் ஸூர்யசந்திரர்களை உதயத்திலும் அஸ்தமன ஸமயத்திலும் க்ரஹணகாலத்திலும் வானத்தில் நடுவில் இருக்கும் போதும் நீரில் பிரதிபிம்பித்திருக்கும் போதும் பார்க்கக் கூடாது. மண்முட்டி, பசு, தேவதை, பிராமணன், நாற்சந்தி, காவல்மரம், ஸ்தலவிருக்ஷம் இவற்றை வலமாகச் செல்லவேண்டும், தாண்டக்கூடாது. அக்கினியை வாயால் ஊதக்கூடாது. அசுத்தப்பொருளை அதில் போடக்கூடாது. அதில் கால்களைக் காய்ச்சக்கூடாது. கிருஹஸ்தன் மூங்கில்தடி, தாமிரத்தாலான கமண்டலு, தங்கக் குண்டலம் இவற்றைத்தரிப்பது நல்லது. ஆடையில்லாதவர்களைப் பார்க்கக் கூடாது. காலை மாலை ஸந்தி வேளையில் உணவருந்துவதும் தூங்குவதும் பிரயாணமும் உடலுறவும் கூடாது. மலமுத்திரங்கள், கோழை, ரத்தம், விஷம் இவற்றை நீரில் கலக்கக்கூடாது. தூங்குபவரை எழுப்பக்கூடாது. அவர்கள் தர்மம் தவற நேர்ந்தால் எழுப்பலாம். தனித்துப்  பாழ்வீட்டில் தூங்கக்கூடாது. தனக்கெனப் பூமாலை தொடுக்கக் கூடாது. கன்று ஊட்டுவதையும் வானவில்லையும் பிறருக்குச் சுட்டிக் காட்டக்கூடாது. தனித்து பெருவழி நடப்பதும் மலையில் வெகுகாலம் வசிப்பதும் கூடாது. மாதவிடாய் உள்ள பெண்ணுடன் நேரி...

அறம் செய விரும்பு - 19

மாலைப்பொழுதைக் கழித்தல் மாலையில் சூரியன் மறையத் தொடங்கியதும் சந்தியாவந்தனம், தொடர்ந்து ஸமிதாதானம் அல்லது ஒளபாஸனம், தேவபூஜை வைச்வதேவம் அதிதிபூஜை செய்ய வேண்டும். இரவில் இதமும் மிதமான நல்ல உணவைச் சாப்பிட்டுப்பின் சிறிது நேரம் கழித்துத் தூங்கலாம். கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்துப் படுக்கலாம். வடக்கில் தலை வைக்கக்கூடாது. யாத்திரையில் மேற்கில் தலைவைத்துப் படுக்கலாம். தன் வீட்டில் கிழக்கிலும் மாமனார் வீட்டில் தெற்கில் தலை வைத்துப் படுக்கலாம். முன்னிரவில் 71/2 நாழிகை (3 மணி) சென்ற பின்னரே தூங்கச் செல்ல வேண்டும். சிறுவர்களும் வயதானவர்களும் நோயாளிகளும் முன்னரே தூங்கலாம். தூங்குமுன் அகத்தியர், மாதவன், முசுகுந்தர், கபில முனிவர், ஆஸ்தீக முனிவர் இவர்களை நினைத்துப் படுக்க வேண்டும். ஆஸ்தீகரின் நினைவு பாம்பு பயத்தை போக்கும். நர்மதையை நினைப்பதும் நல்லது. கோயிலிலும், சுடுகாட்டின் அருகிலும், மரத்தினடியில், நாற்சந்தியிலும், தானிய மூட்டையின் மேலும், குரு, இஷ்டதெய்வம் பெரியோர் இவர்களின் எதிரிலும், அசுத்தமாகவும், கால்களை அலம்பாமலும் பாதுகாப்பில்லாமலும், கருங்கல்லின் மேலும் தூங்கக் கூடாது.  ...

அறம் செய விரும்பு - 18

நியமத்தில் உள்ளவன் சாப்பிடக்கூடியவை   வாழையின் எல்லாப்பகுதிகளும், பலா, அவரை, பாகல், தேங்காய், நார்த்தை, பேரீச்சை, மாதுளை, நாவல், நெல்லி, இஞ்சி, கொத்தமல்லி, சுண்டைக்காய், புளி, இலந்தை, கண்டங்கத்திரி, விளா உளுந்து, துவரை, பயறு, நரிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, கருமொச்சை, கடுகு, எள், மிளகு, சீரகம், திப்பிலி, கருஞ்சீரகம், பரங்கி, பூசணி, வெள்ளரி, கண்டங்கத்திரி, கக்கரி, சேம்பு, சாமை, பொன்னாங்கண்ணி, திராக்ஷை, வல்லாரை, தூதுவளை, பசுவின் பால் தயிர் மோர் நெய், எருமை பால் தயிர் மோர் நெய் வெள்ளாட்டின் பால், கரணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, அகத்தி, நெய்யில் பக்குவமானவை, ஆண்டவனுக்கு நிவேதனமானவை சேர்க்கத்தக்கது. சிஷ்டர்களான முன்னோர்கள் வழக்கில் இருந்தவைகளும் நல்லவையே. நியமத்தில் உள்ளவன் சாப்பிடக்கூடாத பொருள்கள் வெள்ளுள்ளி, வெங்காயம், செம்முருங்கை, முள்ளங்கி, கும்மட்டிக்காய், நாய்க்கொடை, சுரை, ஈன்று பத்து நாளாகாத பசுவின் பால், பெருங்காயம் தவிர மற்ற பிசின் கலந்தது, வெள்ளைக்கத்திரி, பசளை, கோவை, அத்தி, குசும்பா எள்ளு, கொள்ளு, நெய்க்கசண்டு, நீர் கலவாத மோர், காரணமின்றி எள்ளன்னம், பழைய அன்னம், கன்...