பெருமை
தேவலோகத்தில் ஒருநாள் தேவசபை கூடியிருந்தது. தேவர்கள் பூலோகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். தேவலோக அதிபதி இந்திரன் சொன்னான், “மனிதர்கள் வாழும் உலகில் தற்சமயம் கிருஷ்ணதேவன் என்னும் அரசனே மிகவும் நல்லவன். அவனைப் போன்ற குணவானை எங்கும் காணமுடியாது. அவனே எல்லாரையும் விடச் சிறந்தவன்” என்று கூறினான்.
கிருஷ்ணதேவனைத் தேவேந்திரன் புகழ்ந்து பேசியதைக் கேட்ட தேவன் ஒருவன் கிருஷ்ணதேவனை சோதித்துப் பார்க்க விரும்பினான். “தேவராஜனே புகழ்ந்து பேசுமளவு அப்படி என்ன கிருஷ்ணதேவனிடம் சிறப்பு இருக்கிறது! சோதித்துப் பார்த்துவிடலாம்” என்று தீர்மானித்து பூலோகம் புறப்பட்டான்.
பூலோகம் வந்த தேவன், கிருஷ்ணதேவன் நகர்வலம் செல்லும் வழியில் ஒரு இறந்த நாயின் வடிவில் விழுந்து கிடந்தான். அந்த உடலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. நாயின் வாய் வேறு கிழிந்து அவலக்ஷணமாகக் காணப்பட்டது.
கிருஷ்ணதேவன் அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த அழுகிய நாயின் உடலைக் கண்டான். “ஆகா! இந்த நாயின் பல்வரிசைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! பற்கள் எத்தனை சுத்தமாகவும் வெண்மையாகவும் இருக்கின்றன! முத்துக்களைப் போலல்லவா பிரகாசிக்கின்றன!” என்று வாய்விட்டுக் கூறினான்.
கிருஷ்ணதேவனின் கவனம் நாயின் அழுகிப்போன உடலைப் பற்றியோ அதிலிருற்து வீசிய துர்நாற்றம் பற்றியோ செல்லவில்லை. அதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறிய நல்ல விஷயம் பற்றியே இருந்தது. இதுதான் அவனின் சிறந்த குணம்.
கிருஷ்ணதேவனின் உயர்ந்த குணத்தை நேரில் கண்டு மகிழ்ந்த தேவன் நாயின் உடலை விட்டு, அவன் எதிரே சுயஉருவத்தில் தோன்றினான். “அரசனே! உண்மையிலேயே தங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும் நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் காணப்படுகின்றன. தங்களைப் போன்ற மனம் உள்ளவர்களே உலகில் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்!” என்று கூறி கிருஷ்ணதேவனை ஆசீர்வதித்துவிட்டுத் தேவலோகம் திரும்பினான்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
பெருமையுடையவர் பிறர் குறைபாட்டை மறைத்து நிறைகளையே பேசுவர். மற்றுச் சிறுமை குணமையுடையவரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குறைகளையே பேசுவர்.
கிருஷ்ணதேவனைத் தேவேந்திரன் புகழ்ந்து பேசியதைக் கேட்ட தேவன் ஒருவன் கிருஷ்ணதேவனை சோதித்துப் பார்க்க விரும்பினான். “தேவராஜனே புகழ்ந்து பேசுமளவு அப்படி என்ன கிருஷ்ணதேவனிடம் சிறப்பு இருக்கிறது! சோதித்துப் பார்த்துவிடலாம்” என்று தீர்மானித்து பூலோகம் புறப்பட்டான்.
பூலோகம் வந்த தேவன், கிருஷ்ணதேவன் நகர்வலம் செல்லும் வழியில் ஒரு இறந்த நாயின் வடிவில் விழுந்து கிடந்தான். அந்த உடலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. நாயின் வாய் வேறு கிழிந்து அவலக்ஷணமாகக் காணப்பட்டது.
கிருஷ்ணதேவன் அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த அழுகிய நாயின் உடலைக் கண்டான். “ஆகா! இந்த நாயின் பல்வரிசைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! பற்கள் எத்தனை சுத்தமாகவும் வெண்மையாகவும் இருக்கின்றன! முத்துக்களைப் போலல்லவா பிரகாசிக்கின்றன!” என்று வாய்விட்டுக் கூறினான்.
கிருஷ்ணதேவனின் கவனம் நாயின் அழுகிப்போன உடலைப் பற்றியோ அதிலிருற்து வீசிய துர்நாற்றம் பற்றியோ செல்லவில்லை. அதில் காணப்பட்ட ஒரே ஒரு சிறிய நல்ல விஷயம் பற்றியே இருந்தது. இதுதான் அவனின் சிறந்த குணம்.
கிருஷ்ணதேவனின் உயர்ந்த குணத்தை நேரில் கண்டு மகிழ்ந்த தேவன் நாயின் உடலை விட்டு, அவன் எதிரே சுயஉருவத்தில் தோன்றினான். “அரசனே! உண்மையிலேயே தங்களிடம் குணத்தை மட்டுமே நாடும் தன்மையும் நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் உயர்ந்த பண்பும் காணப்படுகின்றன. தங்களைப் போன்ற மனம் உள்ளவர்களே உலகில் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்!” என்று கூறி கிருஷ்ணதேவனை ஆசீர்வதித்துவிட்டுத் தேவலோகம் திரும்பினான்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறிவிடும்.
- திருக்குறள் 980
பெருமையுடையவர் பிறர் குறைபாட்டை மறைத்து நிறைகளையே பேசுவர். மற்றுச் சிறுமை குணமையுடையவரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குறைகளையே பேசுவர்.
Comments