Posts

Showing posts from 2011

கட்டுப்பாடும் சுதந்திரமும்

    தாய் குழந்தையைக் கட்டுப்படுத்துகிறாள். பெரியவர்கள் சிறியவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆசிரியர் மாணவனைக் கட்டுப்படுத்துகிறார். முதலாளி தொழிலாளியைக் கட்டுப்படுத்துகிறார். மதம், ஸமுதாயம், சட்டம் ஆகியவை ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்புவரை கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஆனால் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பது ஒவ்வோர் உயிரின் பிரகடனமாகவும் இருக்கிறது. அப்பொழுது கட்டுப்பாடு என்பது எதற்கு?     சுதந்திரதாஹமுள்ள ஓர் இளைஞன் சாலையில் ஒழுங்கின்றி குறுக்கும் நெடுக்குமாக சென்றுகொண்டிருந்தான். சாலைவிதிகளைப் பின்பற்றுவது மூடத்தனம், அடிமைத்தனம், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பது அவன் கருத்து.     அவனது தாறுமாறான பயணத்தைத் திட்டிச் சென்றனர் சிலர். வேடிக்கை பார்த்துச் சென்றன குழந்தைகள். தங்களது திறமையால் விபத்தைத் தவிர்த்துச் சென்றனர் சிலர். எதிர்பாராத ஸமயத்தில் எதிர்பார்த்திருந்த விபத்து நடந்தது. விதிமீறிப் போனவனை விதி கொண்டு போயிற்று. அந்த கறுப்புச் சட்டைக்காரன் உடலை வெள்ளைத்துணி போர்த்தி எடுத்துச் சென்றனர். என...

அறன் வலியுறுத்தல்

     திருவொற்றியூர் என்னும் ஊரில் கலிய நாயனார் என்றொரு சிவனடியார் இருந்தார். அவர் ஒப்பற்ற செல்வந்தர். செல்வத்தின் பயன் அறிந்தவர்; சிவத்தொண்டினைச் சிறிதும் மறவாதவர். அவர் திருவொற்றியூர்க் கோவிலுக்கு இரவும் பகலும் விளக்கேற்றி வந்தார்.     அவர், நாள் தோறும் ஏற்றிய விளக்குகள் ஒன்று இரண்டல்ல, பலப்பல. அவரது தொண்டின் திறத்தை உலகுக்குக் காட்ட சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.        கலிய நாயனாரது செக்குத் தொழில் சீராக இயங்கவில்லை, நலிவடைந்தது. அதனால் அவரது பெருஞ்செல்வம் சுருங்கிற்று. அப்போதும் அவர் திருவிளக்குத் திருப்பணியை விடவில்லை. அவர் தம் மரபினரிடம் சென்று எண்ணெய் வாங்கி விற்றுக் கொடுப்பார். அதற்கு அவர்கள் தரும் கூலியைக் கொண்டு, திருவிளக்கேற்றி வரும் பணியைச் செய்தார்.     அவ்வாறு சில நாள்கள் சென்றன. எண்ணெய் கொடுத்தவர்களும் கொடுக்க மறுத்தனர். பின் கலியனார் தாமே செக்காடினார். செக்காடிக் கிடைத்த கூலியால் திருவிளக்கேற்றினார்.      செக்குத் தொழிலாளர் பெருகினர். அதனால் கலியநாயனாருக்குச...

தவம்

      உத்தானபாதன் என்றோர் அரசன் இருந்தான். அவனுக்கு சுருசி, சுநீதி என இரண்டு மனைவியர் இருந்தனர். சுருசிக்கு உத்தமன் என்றொரு மகனும் சுநீதிக்கு துருவன் என்றொரு மகனும் இருந்தனர். அவர்களுள் அரசன் உத்தானபாதனுக்கு சுருசியும் அவளது மகன் உத்தமனும்தான் மிகவும் பிரியமானவர்களாக இருந்தனர். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. சுநீதியின் மகன் துருவன் நற்குணங்களும் நற்செய்கைகளும் கொண்டவன்.     ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தந்தையைக் காண விரும்பி அந்தப்புரத்திற்குச் சென்றான்.  அங்கே அரசன், சுருசியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் மடியில் உத்தமன் அமர்ந்திருந்தான். தந்தையின் மடியில் தன் சகோதரன் அமர்ந்திருப்பதைப் பார்த்த துருவன் தானும் அப்பாவின்மடியில் அமரவேண்டும் என ஆசைப்பட்டு அருகில் சென்றான். சுருசி அதை விரும்பமாட்டாள் என்பதை அறிந்திருந்த அரசன், துருவனின் விருப்பத்தை ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல, சுருசி துருவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, “பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய். என் வயிற்றில் பிறக்காமல், வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ...

அடக்கம் உடைமை

    ஓர் அரசனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அரசன் சிறந்த கல்விமான். அவன் தம் பிள்ளைகள் நால்வரையும் கல்வி கற்றுக்கொள்ள ஒரு குருவினிடம் அனுப்பினான்.       பிள்ளைகளுள் நான்காமவன் நாபாகன் படிப்பில் அதிக ஈடுபாடு உடையவன். அதனால் அவன் தன் குருவின் மனம் கோணாதபடி நடந்து வந்தான். குருவும் அவனைப் பாராட்டி அவனுக்கு நன்றாகக் கல்வி கற்றுக் கொடுத்தார்.   நாபாகன் சுறுசுறுப்பாகப் படித்து வந்தான். மற்ற மூவரும் ஓரளவு படித்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். நாபாகன் மட்டும் படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து ஆர்வமுடன் படித்துவந்தான்.   ”நாபாகன் படிப்பிலேயே கவனமாக இருக்கிறான். ஆகையால் இனிமேல் அவன் வரமாட்டான், குருகுலத்திலேயே தங்கிவிடுவான்” என்று அவனுடைய சகோதரர் மூவரும் தந்தையிடம் கூறினர். அரசன் இருந்த சொத்துக்களை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.   சில வருடங்களுக்குப் பிறகு நாபாகன் படிப்பை முடித்து வீட்டிற்குத் திரும்பினான்.    தன் அண்ணன்மார்கள் பாகம் பிரித்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்து “எனக்கு என்ன பாகம் வைத்தீர்கள்?” என்று கேட்டான்.  ...

அழுக்காறாமை

    ஓர் ஊரில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர்.  அண்ணன்  நல்ல குணங்கள் மிகுந்தவன்.  தர்மவான்.  தன்னைத் தேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்வான்.   தம்பியோ அண்ணனுக்கு நேர்எதிரான குணங்கள் உள்ளவன்.  வடிகட்டிய கஞ்சன். பேராசைக்காரன்.  பொறாமைபிடித்தவன்.  தம்பியின் மனைவியும் அவனைப்போலவே இருந்தாள்.    ஒருசமயம் அண்ணனின் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. வறுமை அடைந்தான்.  உணவுக்கே கஷ்டமானது.  அப்பொழுது முதியவர் ஒருவர் அண்ணன் வீட்டிற்கு வந்தார்.    “நான் வெகுதூரத்திலிருந்து வருகிறேன். மிகவும் பசிக்கிறது. தயவுசெய்து உண்பதற்கு ஏதாவது கொடுங்கள்” வேண்டினார் முதியவர். தன்சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த அண்ணனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.  உடனே தன் மனைவியின் தாலியை விற்றோ, அடகு வைத்தோ பணம் புரட்டலாம் என்று மனைவியின் தாலியைப் பெற்று வெளியில் சென்றான்.    அதையெல்லாம் கிழவரும் கவனித்தார்.  அவர் அண்ணன் மனைவியை அழைத்து, “நான் குளித்த பிறகுதான் உணவு உண்பேன், எனக்கு குளிக்க...

பெருமை

  தேவலோகத்தில் ஒருநாள் தேவசபை கூடியிருந்தது. தேவர்கள் பூலோகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். தேவலோக அதிபதி இந்திரன் சொன்னான், “மனிதர்கள் வாழும் உலகில் தற்சமயம் கிருஷ்ணதேவன் என்னும் அரசனே மிகவும் நல்லவன். அவனைப் போன்ற குணவானை எங்கும் காணமுடியாது. அவனே எல்லாரையும் விடச் சிறந்தவன்” என்று கூறினான்.     கிருஷ்ணதேவனைத் தேவேந்திரன் புகழ்ந்து பேசியதைக் கேட்ட தேவன் ஒருவன் கிருஷ்ணதேவனை சோதித்துப் பார்க்க விரும்பினான். “தேவராஜனே புகழ்ந்து பேசுமளவு அப்படி என்ன கிருஷ்ணதேவனிடம் சிறப்பு இருக்கிறது! சோதித்துப் பார்த்துவிடலாம்” என்று தீர்மானித்து பூலோகம் புறப்பட்டான்.     பூலோகம் வந்த தேவன், கிருஷ்ணதேவன் நகர்வலம் செல்லும் வழியில் ஒரு இறந்த நாயின் வடிவில் விழுந்து கிடந்தான். அந்த உடலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. நாயின் வாய் வேறு கிழிந்து அவலக்ஷணமாகக் காணப்பட்டது.     கிருஷ்ணதேவன் அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த அழுகிய நாயின் உடலைக் கண்டான். “ஆகா! இந்த நாயின் பல்வரிசைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! பற்கள் எத்தனை சுத்தமாக...