Posts

Showing posts from October, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 17

Image
  ஹிந்துமத தர்ம விளக்கம் பாடம் - 17 (22.10.2020) சென்ற வாரம்… கர்மம் நல்வினை (புண்யம்) = விதி வேதத்தில் விதிக்கப்பட்டவை நித்தியம், நைமித்திகம், காமியம், பிராயச்சித்தம்.  தீவினை(பாபம்) = நிஷித்தம்   மஹாபாதகங்கள், ஸமபாதகங்கள், உபபாதகங்கள். கர்மத்தைத் தூண்டும் வாஸனைகள் எண்ணங்களாக 16 விதம். கர்மத்தின் அடிப்படையில் பிறவிகள் புண்ணியமிகுதி, பாபமிகுதி, மிச்ரம் (இரண்டும் கலந்தது). ஒவ்வொன்றிலும் மூன்று உட்பிரிவுகள் - உத்தமம் மத்திமம் அதமம். இதனடிப்படையில் பிறவிகள். இனி... கர்மத்தைச் செய்யும் கருவிகள் மனிதன் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களால் புண்ணியம், பாபம், மிஸ்ரம் என்ற மூவிதமான செயல்களையும் செய்கின்றான். ஆகவே கர்மம் வேறு விதமாக திரும்பவும் ஒன்பது வகைப்படுகிறது. அவை மானஸபுண்ணியம், மானஸபாபம், மானஸமிச்ரம், வாசிகபுண்யம், வாசிக பாபம், வாசிகமிச்ரம், காயிகபுண்யம், காயிகபாபம், காயிகமிச்ரம்.  மானஸ புண்ய கர்மம் வைராக்கியம், பக்தி, ஞானம் இவற்றை பெற வேண்டும் என்றும் இவற்றின் சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மனதில் நினைத்தல். பரோபகாரம் செய்யவேண்டும், ஜபம், தியானம் செய்ய வேண...

Hindumatha Dharma Vilakkam - Chapter 16

Image
ஹிந்துமத தர்ம விளக்கம்   பாடம் - 16 கர்மம் கர்மம் என்றால் வினை, செயல். செயலை செய்ய உதவும் கருவி கரணம் எனப்படும். அவற்றுள் முக்கியமானவை மூன்று. மனம், வாக்கு, காயம் (உடல்). இவை திரிகரணங்கள் எனப்படும். இவற்றால் செய்யப்படும் கர்மங்கள் முறையே மானஸிகம், வாசிகம், காயிகம் எனப்படும். அக்கர்மங்கள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை. இவற்றின் பயன்கள் முறையே நன்மை, தீமை - புண்யம், பாபம் - எனப்படும்.  பகவத்கீதையில் பகவான் கர்மத்தையும், விகர்மத்தையும், அகர்மத்தையும்‌ தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறார். கர்மத்தின் பிரிவுகள் நல்வினை, தீவினை எவை என்பது சாஸ்த்ரங்களில் விதி, நிஷேதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. விதிகள் செய் என்று விதிக்கப்பட்டவை விதிகள், அதாவது நல்வினைகள். அவை நான்கு பிரிவுகளாக உள்ளன. 1.நித்யம், 2.நைமித்யம், 3.காம்யம், 4. பிராயச்சித்தம். 1.நித்யகர்மா நாள்தோறும் செய்யவேண்டியவை. அவை ஜபம், தியானம், பூஜை, பாராயணம், படித்தல் போன்றவை. இவை பஞ்சமஹாயஜ்ஞம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்யமாகவும், பலம் பொருந்தியதாகவும் இருக்க, தினசரி குளிப்பது, உடற்பயிற்சி செய்வது போல, மனம் தூய்மையானத...

Hindumatha Dharma Vilakkam - Chapter 15

Image
🕉️ ஹிந்துமத தர்ம விளக்கம்  பாடம் 15 (01.10.2020) வித்யா ஸ்தானங்கள் இனி, ஸநாதன தர்மம் என்ற ஹிந்து மதத்துக்கு பிரமாணமாக - ஆதாரமாக - இருக்கக்கூடிய நூல்களைப் பற்றி பார்ப்போம். அவை சாஸ்த்ரங்கள் எனப்படுகின்றன. (அறிவைக் கொடுத்து ஜீவனைக் காப்பாற்றுவது என்பது பொருள்.) வேதங்கள் நான்கு : ரிக், யஜுர், ஸாம, அதர்வணம். 1.ரிக் (புகழ்த்தும்) வேதம் யாக கிரியைகளைப் பற்றிச் சொல்வது. இதை அறிந்து ஹோமம் செய்பவன் ஹோதா எனப்படுவான். 2.யஜுர் (மகிழ்விக்கும்)  வேதம் யாக தேவதைகளை அழைத்தல் துதித்தல், யாகசாலை அமைப்பு விவரம், ராஜஸூயம், அச்வமேதம்  போன்ற யாக விவரணம், தினசரி செய்யவேண்டிய ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலிய விஷயங்கள். இவற்றை அறிந்து யாகத்தை நடத்துகிறவன் அத்வர்யு. 3.ஸாமம் (துக்கத்தைப் போக்கும்) வேதம் யாக அதிஷ்டான தேவதையாகிய இறைவனை துதிக்க வேண்டிய கிரியைகள். ஸாமகானம் செய்பவன் உத்காதா. 4.அதர்வணம் (நன்மை பயக்கும்) வேதம் ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்களால் ஏற்படும் தவறுகளை நிவிர்த்திக்கின்ற கிரியைகளைச் சொல்வது. அரசனுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யவும், உலகத்திற்கு துரபிக்ஷத்தைப் போக்கி சுபிக்ஷத...