Hindu matha Dharma Vilakkam - Chapter 14
ஹிந்து மத தர்ம விளக்கம்
பாடம் - 14
ப்ரமாணங்கள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - அறிவு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டக்கூடியது - திருக்குறள்.
கண்களாலும் வாக்கினாலும் மற்றவைகளாலும் அவன் அறியப்படுகிறானில்லை. நற்கருமங்களினாலும், தபசினாலும், சுத்தமான சத்துவ குணம் பொருந்திய மனதுடையவனும் இடையறாது தியானம் செய்கிறவனுமான மனிதன் ஞானத்தினால் அவனைப் பார்க்கிறான்.
முண்டக உபநிஷத்.
ஞானம் எப்படி வரும்?
ஞானம் கல்வி கேள்விகளால் வரும்.
கற்றனைத் தூறும் அறிவு - திருக்குறள்.
ஞான ப்ரமாணங்கள் (ஞான ஸாதனங்கள் - அறிவைத் தரும் கருவிகள்)
1.பிரத்யக்ஷப் பிரமாணம்
அக்ஷம் என்றால் புலன்கள். புலன்வழி உண்டாகும் ஞானம் பிரத்யக்ஷ ஞானம். அது ஏற்படுவதற்கு கருவியாக இருக்கக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்கள் பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதைக் காட்சி அளவை என்று தமிழில் சொல்வர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து அறிவுகளும் புலன்கள் வழி நமக்கு ஏற்படுகின்றன. ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவிற்கு முந்திய ஐந்து அறிவுகள் இவையே.
யோகிகள், பக்தர்களுக்கு நேரில் பிரத்யட்சமாகவே காட்சி கொடுத்திருக்கிறார் கடவுள். (ஸகுண பிரம்மம் ப்ரத்யக்ஷ பிரமாணத்தினாலும் அறியத்தக்கது)
2.அனுமானப் பிரமாணம்
பிரத்தியட்ச பிரமாணத்தை அடிப்படையாகக்கொண்டு யூகித்து (அநுமானித்து) அறியும் அறிவு அநுமான ஞானம் ஆகும். இந்த அறிவுக்கு ஸாதனமாக இருக்கக்கூடிய ஊகமே அநுமான ப்ரமாணமாகும்.
இது ஊக அளவை என்று தமிழில் சொல்லப்படுகிறது.
உதாரணம் - புகையை வைத்து நெருப்பு இருப்பதை அனுமானித்தால் அறிதல்.
காரியமான உலகை வைத்து இதைச் செய்த காரணமாக கடவுள் இருக்கின்றார் என்பது அனுமான அறிவு.
3.உவமான பிரமாணம்
4.அர்த்தாபத்தி பிரமாணம்
ஒரு பொருளைக் கொண்டு, அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளை வருவித்து அறிந்து கொள்ளுதல்.
எ-கா - மழை பெய்திருக்கிறது. (நிலத்திலுள்ள ஈரத்தைப் பார்த்து மழை பெய்திருக்கிறது என்ற அறிவைப் பெறுகிறோம்)
உலக இயக்கத்தில் இருக்கும் ஒழுங்கு, நேர்த்தி, அழகு, அறிவு. இதை ஒழுங்குபடுத்தி இயக்குபவன் ஒருவன் இருக்கின்றான் என்ற அறிவைத் தருகின்றது.
உலகில் காரணம் இல்லாத காரியம் ஒன்று எங்கும் காணப்படவில்லை.
6.ஸம்பவம்
சம்பவம் என்பது பொருந்துதல்/ ஒப்புதல் என்று பொருள்படும்.
ஒன்றைச் சொல்லுகின்ற பொழுதே அதற்குள் இன்னொன்று அடங்கி இருத்தல்.
எ-கா : 100 பேர் இருக்கிறார்கள் எனும் பொழுது நிச்சயமாக 99 பேர் அங்கு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
7.ஐதிஹ்யம்
ஐதிஹ்யம் என்பது உலக வழக்கு. பரம்பரை வழக்கம்.
குறிப்பு: உபமானம் முதலாக ஐதிஹ்யம் ஈராக உள்ள ஐந்தும் அனுமானத்தில் அடங்கும். அனுமானம் ப்ரத்யக்ஷத்தை ஆதாரமாகக் கொண்டது.
8.சப்தப் பிரமாணம்
ஆப்த வாக்யம் - ஆன்றோர் வாக்கு - சப்த ப்ரமாணம்.
எ-கா - பள்ளிப் பாடங்கள்,
குரு உபதேசம்.
எல்லா குருமார்களுக்கும் பரமகுருவாக இருக்கக் கூடியவர் இறைவன். இறைவனுடைய வாக்கு வேதங்கள், ஆகமங்கள்.
ஆகவே, வேதங்கள் சப்த பிரமாணம் எனப்படுகின்றன.
தோன்றாமை (அஞ்ஞானம்), ஐயம் (ஸம்ஶயம்), திரிபு (விபர்யயம்)
கற்க கசடற…. திருக்குறள்
இனி, ஹிந்து மதக் கொள்கைக்கு பிரமாணமாக இருக்கக்கூடிய நூல்களைப் பற்றி பார்ப்போம். அவை சாஸ்த்ரங்கள் எனப்படுகின்றன. (அறிவைக் கொடுத்து ஜீவனைக் காப்பாற்றுவது என்பது பொருள்.)
Comments