Hindu matha Dharma Vilakkam - Chapter 14

ஹிந்து மத தர்ம விளக்கம் பாடம் - 14 ப்ரமாணங்கள் (24.09.2020) சென்ற வாரம்... உலகின் தோற்றமும் ஒடுக்கமும் பரமாத்மாவின் சக்தியாகிய மாயையிலிருந்து உலகம் தோன்றியது. ப்ரளயகாலத்தில் மாயையிலேயே ஒடுங்குகிறது. பரமாத்மா நித்யமானவர் (தோற்றமும் மறைவுமில்லாதவர்). தோன்றிமறைகின்ற உலகம் அநித்யமானது. நித்யமானதின்மேல் அநித்யமானது தோன்றிமறைகிறது. அநித்யமான அனைத்துள்ளும் நித்யமானது இருக்கிறது. நித்யமானதை அறிந்துகொள்வது எப்படி? ஞானத்தினால் கடவுள் காட்சி! மெய்ப்பொருள் காண்பது அறிவு - அறிவு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டக்கூடியது - திருக்குறள். கண்களாலும் வாக்கினாலும் மற்றவைகளாலும் அவன் அறியப்படுகிறானில்லை. நற்கருமங்களினாலும், தபசினாலும், சுத்தமான சத்துவ குணம் பொருந்திய மனதுடையவனும் இடையறாது தியானம் செய்கிறவனுமான மனிதன் ஞானத்தினால் அவனைப் பார்க்கிறான். முண்டக உபநிஷத். ஞானம் எப்படி வரும்? ஞானம் கல்வி கேள்விகளால் வரும். கற்றனைத் தூறும் அறிவு - திருக்குறள். ஞான ப்ரமாணங்கள் (ஞான ஸாதனங்கள் - அறிவைத் தரும் கருவிகள்) உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு சாதனம் - கருவி -...