Posts

Showing posts from January, 2014

மஹாகவி பாரதியாரின் ஞானப்பாடல்கள்

Image
பரசிவ வெள்ளம்  உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும் வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.  1 காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. 2 எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய்  3 வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். 4 தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற் சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி, 5 தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த் தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. 6 எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. 7 வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. 8 காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு ளாய் மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. 9 எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. 10 மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்; பற்றிதனைக் கொண்டார் பயனைத்த...