Posts

நீதிசதகம் Neethi Satakam

  ஓம்! ஸ்ரீபர்த்ருஹரியின் நீதி சதகம் மூலமும் உரையும் பாரத தேசத்தில் தோன்றிய நமது ஹிந்து மதம் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டது. அதனால் தான் நமது மதத்திற்கு பாரம்பர்யப் பெயர் ஸநாதந தர்மம் என்று இருக்கிறது. பகவத்கீதையிலும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா, "எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை உயர்த்துவதற்கு நான் அவதாரம் செய்கிறேன்", என்று கூறுகிறார். தர்மம் தர்மத்தைப் பின்பற்றும் மனிதர்களாலே காக்கப்படுகிறது. ஆகவேதான் பகவான், "தர்மவான்களைக் காத்தும் அதர்மிகளை அழித்தும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக நான் யுகந்தோறும் தோன்றுகிறேன்", என்கிறார். பகுத்தறிவுள்ள ஜீவர்களாகிய நாம் தர்மத்தின் மதிப்பை உணர்ந்து அதைப் பின்பற்ற வேண்டும். நமக்கு இறைவன் துணை இருப்பார். தர்மத்தின் அடிப்படையிலேயே இறைவன் உலகை நடத்துகிறார். எது தர்மம் என்று மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இறைவன் வேதங்களை அருளியுள்ளார். நமது வேதங்கள் எண்ணற்ற தர்மங்களைச் சொல்கின்றன. தர்மம் - அறம், நீதி, நியாயம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வாழ்வியலைப் பாடும் இலக்கிய நூல்களில் நீதி இலக்கியங்கள் எனத் தனியே பி...

Kaivalya Navaneetham 2(121 - 180)

ॐ கைவல்ய நவநீதம் ஸந்தேஹம் தெளிதல் படலம் பாடல் : 121 மானஞ்சி றந்தகுரு நாதனே ஆநந்த வகைகளெத் தனை என்னிலோ ஞானந்தி கழ்ந்தபிர மாநந்தம் வாசனா நந்தம்விட யாநந்தமென்று ஆநந்தம் மூன்றுவிதம் எட்டுவகை என்பர்சிலர் அவ்வைந்தும் இதிலடக்கம் ஆனந்த வகைசொலக் கேள்மைந்த னேயெட்டும் இஃதின்ன தின்னதெனவே. பொருள் : மானம் சிறந்த குருநாதனே = பெருமை மிகுந்த குருநாதனே,   ஆநந்த வகைகள் எத்தனை என்னிலோ = ஆநந்தத்தின் வேறுபாடுகள் எத்தனை என்று கேட்பாயாகில், ஞானம் திகழ்ந்த பிரமாநந்தம் = சித்ஸ்வரூபமான பிரஹ்மாநந்தம், வாசனாநந்தம் = சும்மாயிருக்கும்பொழுது வெளிப்படும் வாசனாநந்தம், விடயாநந்தம் = விஷயங்களை அநுபவிக்கும் பொழுது மனதில் ஏற்படும் விஷயாநந்தம், என்று ஆநந்தம் மூன்று விதம் = என ஆநந்தம் மூன்று வகையாகும். எட்டு வகை என்பர் சிலர் = ஆநந்தத்தை எட்டு விதம் என்று சொல்வார்கள் சில அறிஞர்கள், அவ்வைந்தும் இதில் அடக்கம் = அவர்கள் கூறும் ஏனைய ஐந்து ஆநந்தங்களும் இந்த மூன்று ஆநந்தங்களுள் அடங்கும். எட்டும் இஃது இன்னது இன்னது எனவே = எட்டினையும் இந்த ஆநந்தம் இந்தப் பெயருடையது, இந்த ஆநந்தம் இந்தப் பெயருடையது என, ஆனந்த வகை சொலக் கேள் =...